திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 1.1 – உயர்வற

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << தனியன்கள் ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன், திருமேனியை உடையவன், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரு உலகங்களுக்கும் தலைவன், வேதத்தாலே முழுவதுமாகக் காட்டப்பட்டவன், எல்லாவிடத்திலும் வ்யாபித்திருப்பவன், எல்லாரையும் நியமிப்பவன், சேதனர்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை முழுவதுமாக ஆள்பவன் ஆகிய விஷயங்களை எடுத்துச் சொல்லி அப்படிப்பட்ட எம்பெருமான் தனக்கு மயர்வற … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம் |ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் || எம்பெருமானின் பக்தர்களுக்கு அமுதம் போன்றிருக்கும், எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்ககூடியதும், எல்லா அர்த்தங்களையும் காட்டகூடியதும், ஸ்ரீ சடகோபரின் திருவாக்கிலே உதித்ததும், ஆயிரம் சாகைகளையுடைய ஸாம வேதமாய், அதன் ஸாரமான சாந்தோக்ய உபநிஷத்தாய் இருக்கும், தமிழ் வேதக் கடலான திருவாய்மொழியை நான் வணங்குகிறேன். திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்மருவினிய வண்பொருநலென்றும் … Read more

கோயில் திருவாய்மொழி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி ஸ்ரீ மணவாள மாமுனிகள் வைகாசி விசாகம், நம்மாழ்வார், திருவாய்மொழி மற்று திருக்குருகூரின் (ஆழ்வார்திருநகரி) பெருமையை உபதேச ரத்தின மாலை 15ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயணனும் அவன் விபூதிகளும் ஓங்கும்படி மங்களாசாஸனம் செய்த நம்மாழ்வார் அவதரித்த இந்த திருவைகாசித் திருநாளுக்கு ஒப்பாக ஒரு நாளுண்டோ? (கிடையாது) நம் சடகோபரான நம்மாழ்வாருக்கு ஒப்பாக ஒருவர் உண்டோ? (ஸர்வேச்வரனும், நித்யர்களும், முக்தர்களும், … Read more

திருவாசிரியம் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இயற்பா ஸ்ரீமந்நாராயணனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்று கொண்டாடப்படுகிறார்கள். அவர்களுள் தலைவரான நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு அற்புத ப்ரபந்தங்களை அருளியுள்ளார். அவற்றுள் திருவிருத்தத்தில், ஸர்வேச்வரனுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை எல்லாம் அவன் காட்டிக்கொடுக்கக் கண்ட ஆழ்வார், அவன் பரமபதத்தில் நித்யஸூரிகளுடனும் முக்தர்களுடனும் ஆனந்தமாக இருப்பதை நினைத்து, இந்த ஸம்ஸாரத்தில் உள்ளவர்கள் அதற்குத் தகுதி … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 101 – 108

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 91 – 100 நூற்றொன்றாம் பாசுரம். எம்பெருமானாருடைய புனிதத்தன்மையைக் காட்டிலும் அவருடைய இனிமை மிகவும் உயர்ந்தது என்கிறார். மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்று நைந்தே அறிவுகேட்டை … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 91 – 100

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 81 – 90 தொண்ணூற்றொன்றாம் பாசுரம். இவர்கள் இப்படி ஈடுபாடில்லாமல் இருந்தாலும் எம்பெருமானார் இவர்களுடைய வாழ்ச்சிக்காகச் செய்த முயற்சியை நினைத்து அவரைக் கொண்டாடுகிறார். மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப் பொருளாம் இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்கத் தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 81 – 90

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 71 – 80 எண்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் க்ருபையினாலேயே தாம் திருந்தியதை எம்பெருமானாரிடமே விண்ணப்பம் செய்து, தேவரீர் க்ருபைக்கு ஒப்பில்லை என்கிறார். சோர்வு இன்றி உன்தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால் சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 71 – 80

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 61 – 70 எழுபத்தொன்றாம் பாசுரம். இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் என்று இசைந்து தம்முடைய விசேஷ கடாக்ஷத்தாலே இவருடைய ஞானத்தை தன் விஷயத்திலே ஊன்றியிருக்குமாறு பெரிதாக்க, தமக்குக் கிடைத்த பேற்றை நினைத்துப் பார்த்து த்ருப்தி அடைகிறார். சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது அத்தாமரைத் தாள்களுக்கு உன்தன் … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 61 – 70

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 51 – 60 அறுபத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானாரின் குணங்களின் வைபவம் எப்படி இருக்கும் என்று கேட்க அதை விவரித்தருளுகிறார். கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 51 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 41 – 50 ஐம்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்தருளினது என்னை அடிமைகொள்ளுகைக்காகவே என்று சொல்லுகிறார். அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர் முடியப் பரி நெடுந்தேர் விடும் கோனை முழுதுணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப் படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே தன்னுடைய திருவடிகளைப் … Read more