நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள் ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை வேயர் பயந்த விளக்கு புதிதாக மலர்ந்த, இதழ்களையுடைய தாமரை மலரில் நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார் என்னும் தேவதையின் ப்ரிய தோழியாகவும், திருமல்லி நாட்டை ஆள்கின்ற அழகிய மயில் போன்றவளாகவும், ம்ருது ஸ்வபாவத்தை உடையவளுமான ஆண்டாள் நாச்சியார், … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 24ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து  ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு என்பது ஐந்து என்று ஒரு … Read more

அமலனாதிபிரான் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அமலனாதிபிரானின் பெருமையை உபதேச ரத்தின மாலை 10ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின் நன்குடனே கொண்டாடும் நாள் உலகத்தவர்களே! பாருங்கள், இன்று கார்த்திகையில் ரோஹிணி நன்னாள். இன்றைய தினமே பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார் அவதரித்ததால், … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << பாசுரங்கள் 16 – 20 நப்பின்னைப் பிராட்டி “எம்பெருமானை அனுபவிப்பதில் நானும் உங்கள் கோஷ்டியில் ஒருத்தியே” என்று சொல்லி ஆண்டாள் கோஷ்டியில் வந்து சேர்ந்து கொள்கிறாள். இருபத்தொன்றாம் பாசுரம். இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), பரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள். ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப     … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 16 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << பாசுரங்கள் 6 – 15 இனி, 16 மற்றும் 17ம் பாசுரங்களில், நித்யஸூரிகளான க்ஷேத்ர பாலகர்கள், த்வார பாலகர்கள், ஆதிசேஷன் போன்றோர்களுக்கு இவ்வூரில் ப்ரதிநிதிகளாய் இருப்பவர்களை எழுப்புகிறாள் பதினாறாம் பாசுரம். இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள். நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய       கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ | ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: || ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 22ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய் இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் திருமகளாரான … Read more

திருப்பள்ளியெழுச்சி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெருமையை உபதேச ரத்தின மாலை 11ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்நான்மறையோர் கொண்டாடும் நாள் உலகத்தவர்களே! வைஷ்ணவமான மாதம் என்ற பெருமையைக் கொண்ட மார்கழியில், கேட்டை தினத்துக்கு என்ன பெருமை என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன், … Read more

கண்ணிநுண் சிறுத்தாம்பு – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் பெருமையை உபதேச ரத்தின மாலை 26ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து  சொற்களின் பூர்த்தியும் பொருளின் பூர்த்தியும் நிரம்பப் பெற்றதான பெரிய திருமந்த்ரம் என்று … Read more

திருப்பல்லாண்டு – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருப்பால்லாண்டின் பெருமையை உபதேச ரத்தின மாலை 19ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம் ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால் எப்படி வேதத்துக்கு ப்ரணவம் முதன்மையானதாகவும், ஸாரமாகவும் இருக்கிறதோ, அதைப்போல ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் முதன்மையானதாகவும், ஸாரமாகவும் திருப்பல்லாண்டு விளங்குகிறது என்பது … Read more