ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
![]() |
![]() |
ச்லோகம் 1
நமஸ்தே ஹஸ்தி சைலேச! ஸ்ரீமன்! அம்புஜ லோசன! |
சரணம் த்வாம் பிரபன்னோஸ்மி ப்ரணதார்த்தி ஹராச்யுத! ||
கேட்க
ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம். தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன்.
ச்லோகம் 2
ஸமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண! கருணோல்பண! |
விலஸந்து கடாக்ஷாஸ்தே மய்யஸ்மின் ஜகதாம்பதே ||
கேட்க
எல்லா ப்ராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! நிறைந்த கருணை உள்ளவனே! உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை இந்த என்னிடம் மலரட்டும்.
ச்லோகம் 3
நிந்திதாசார கரணம் நிவ்ருத்தம் க்ருத்ய கர்மண : |
பாபீயாம்சம் அமர்யாதம் பாஹிமாம் வரத ப்ரபோ! ||
கேட்க
நல்லவர்களால் வெறுக்கப்பட்ட செயல் புரிபவனும், செய்ய வேண்டியதைச் செய்யாதவனும், பாபிஷ்டனும், மரியாதை இல்லாதவனுமான என்னை ஹே வரதராஜ! ரக்ஷிப்பாயாக.
ச்லோகம் 4
ஸம்ஸார மருகாந்தாரே துர்வ்யாதி வயாக்ர பீஷணே |
விஷய க்ஷுத்ர குல்மாட்யே த்ருஷாபாதபசாலினி ||
கேட்க
ச்லோகம் 5
புத்ர தார க்ருஹ க்ஷேத்ர ம்ருக த்ருஷ்ணாம்பு புஷ்கலே |
க்ருத்யா க்ருத்ய விவேகாந்தம் பரிப்ராந்தம் இதஸ் தத: ||
கேட்க
ச்லோகம் 6
அஜஸ்ரம் ஜாத த்ருஷ்ணார்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம் |
க்ஷீண சக்தி பலாரோக்யம் கேவலம் க்லேச ஸம்ச்ரயம் ||
கேட்க
ச்லோகம் 7
ஸந்தப்தம் விவிதைர் து:கை: துர்வசைரேவமாதிபி: |
தேவராஜ! தயாஸிந்தோ! தேவதேவ ஜகத்பதே! ||
கேட்க
ச்லோகம் 8
த்வதீக்ஷண ஸுதாஸிந்து வீசி விக்ஷேபசீகரை: |
காருண்ய மாருதாநீதை: சீதலைரபிஷிஞ்சமாம் ||
கேட்க
4-8 – இந்த ஐந்து ச்லோகங்களால் தமது நிலையை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கி, தமது ரக்ஷணத்தை தேவப்பெருமாளிடத்தில் இரக்கிறார்.
ஸம்ஸாரம் என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள். பாலைவனத்தில் முட்புதர்கள்போல் அற்பசுகங்கள் நிறைந்திருக்கின்றன. ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும் இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும், திறமையற்றவனும், தேஹ திடம், மநோ திடம், தேஹ ஆரோக்யம் இவைகளும், இவைகளால் குறைந்தவனும் க்லேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும் இப்படி சொல்லத்தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனுமான என்னை தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே! உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால் கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக. குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டுவந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை ஏறிப்பதால் ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக – குளிரக் கடாக்ஷிக்கவேணும் என்பது பொருள்.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
0 thoughts on “ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் – ச்லோகங்கள்”