ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் – துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு
நான்காம் பாசுரம். ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அருளிச்செய்கின்றார் இங்கே.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், புகழ் பெற்ற திருமழிசைப் பிரான், அருள் நிறைந்த நம்மாழ்வார், சேரகுல நாதனான குலசேகரப் பெருமாள், தூய மனத்தனரான பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நன்மை பொருந்திய திருப்பாணாழ்வார், நன்மை பொருந்திய திருமங்கை ஆழ்வார் என்பதே ஆழ்வார்களின் அவதார க்ரமம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org