இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – தனியன்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் – என்னுடைய சென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு என்னுக் கடவுடையேன் யான் அநாதி காலமாக நான் சேர்த்த பாபங்களெல்லாம் போகும்படி மூங்கில் குடியிலே அவதரித்த அமுதனாரின் பொன்னைப்போன்ற விரும்பத்தக்க திருவடிகளை என்னுடைய தலைக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டேன். இப்படிச் செய்தபின் தெற்குத் திக்கில் இருக்கும் யமனும் அவன் அடியார்களும் எனக்கு எவ்விதத்திலும் … Read more