ஞான ஸாரம் – 1 – ஊன உடல்

ஞான ஸாரம் முதல் பாட்டின் முகவுரை ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும். அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின் உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும். இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர். இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு. இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது. இம்மூன்று … Read more

ஞான ஸாரம் – நூன் முகவுரை – அவதாரிகை

ஞான ஸாரம் ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பெருமானாருக்குச் சீடராய் அவர் திருவடிகளில் தஞ்சம் புகுந்தவர். அனைத்து வேதம் முதலான சாஸ்திரங்களின் கருத்துக்களையெல்லாம் அவரிடம் கேட்டுத் தெளிந்தவர். அதனால் பரம்பொருளை அடைந்து நுகரும் பேரின்பம் ஆகிய இவற்றின் அடித்தள உண்மைகளை நன்கறிந்திருந்தவராய் இருந்தார். அவர் அருகிலேயே உடனிருந்து அவர் பாதங்கள் சேவித்துக்கொண்டு அவர் மனம் மகிழும்படி பணிவிடைகள் செய்து வந்தார். இவ்வாறான குரு பக்தி கொண்ட ஸ்ரீ அருளாளப் பெருமாளெம்பெருமானார் தம்முடைய மிக்க கருணையினால் தம் குருவான எம்பெருமானாரிடம் … Read more

ஞான ஸாரம் – தனியன்கள்

ஞான ஸாரம் தனியன் கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே! ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!! பொழிப்புரை:- கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும், துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும், தமது ஞானஸார, ப்ரமேயஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன். ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் ! சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !! ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும், … Read more

ஞான ஸாரம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் – வானமாமலை புத்தகம் (e-book): http://1drv.ms/1G7NLmt வ்யாக்யான மூலம் ஸ்ரீமத் மணவாள மாமுநிகளாலும், தமிழில் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களாலும் எழுதப்பட்டது. இந்த க்ரந்தம் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவம்சத்தில் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமியால் தமிழில் விரிவுரை இயற்றப்பட்டது. கீர்த்தி மூர்த்தி ஸ்வாமி ஸ்ரீநிவாஸாசாரியார் … Read more