வரவரமுனி சதகம் – பகுதி 5

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 4

अन्तर्ध्यायन्वरवरमुने ! यद्यपि त्वामजस्त्रं |
विश्वं तापैस्त्रिभिरभिहतं वीक्ष्य मुह्यामसह्यम् ||
क्षुत्सम्पातक्षुभितमनसां को हि मध्ये बहूनां |
एकस्स्वादु स्वयमनुभवेन्नेति चेतःप्रसादम्  || ४१॥

அந்தர் த்யாயந் வரவரமுநே யத்யபி த்வாமஜஸ்ரம்  |
விச்வம் தாபைஸ்த்ரிரபி ஹதம் வீக்ஷ்ய முஹ்யாம்யஸஹ்யம்  ||
க்ஷுத்ஸம்பாத க்ஷுபித மநஸாம் கோஹி மத்யே பஹுநாம் |
ஏக ஸ்வாது ஸ்வயமநுபவந் நேதி சேத: ப்ரஸாதம் ||  41

வரவரமுநியே! உம்மை எப்போதும் மனதில் த்யாநம் செய்துகொண்டு மூன்று வகையான தாபங்களால் அடிபட்ட பொறுக்க முடியாத உலகத்தைக் கண்டு மோஹத்தை அடைகிறேன். பசி தாஹங்களால் கலங்கிய மனமுள்ள பலர் மத்தியில் உள்ள எவன் ஒருவன்தான் ஸுகத்தை அநுபவித்து மனத்தெளிவைப் பெறுகிறான்?

सत्वोदग्रैस्सकलभुवनश्लाघनीयैश्चरित्रैस्  –
त्रैयन्तार्थप्रकटनपरैः सारगर्भैर्वचोभिः ||
लोकोत्तीर्णं वरवरमुने लोकसामान्यदृष्ट्या |
जानानस्त्वां कथमपि न मे जायतामक्षिगम्यः || ४२॥

ஸத்வோதக்ரைஸ் ஸகல புவநச்லாகநீயைச் சரித்ரை: –
த்ரையந்தார்த்த ப்ரகடநபரை: ஸாரகர்ப்பைர்வசோபி: ||
லோகோத்தீர்ணம் வரவரமுநே லோக ஸாமாந்ய த்ருஷ்ட்யா |
ஜாநாநஸ்த்வாம் கதமபி ந மே ஜாயதாமக்ஷிகம்ய: ||  42

ஸத்வ குணம் நிறைந்து,  எல்லா உலகத்தவர்களும் புகழத்தக்க சரித்திரங்களாலும் வேதாந்தப் பொருளை வெளிப்படுத்துவதில் நோக்கமுள்ள ஸாரமுள்ள வார்த்தைகளும் உடைய வரவரமுநியே! உலகத்தில் ஸாமான்யமாக அறிந்து கண்களுக்குப் புலப்பட்டவராக எனக்கு ஆக வேண்டா.

कल्याणैकप्रवनमनसं कल्मषोपप्लुतानां |
क्षान्तिस्थेमद्रढिमसमताशीलवात्सल्यसिन्धो ||
त्वामेवाSयं वरवरमुने ! चिन्तयन्नीप्सति त्वाम्
आर्तं श्रीमन् ! कृपणमपि मामर्हसि त्रातुमेव ||  ४३॥

கல்யாணைக ப்ரவண மநஸம் கல்மஷோப ப்லுதாநாம் |
க்ஷாந்தி ஸ்தேம த்ரடிம ஸமதா சீல வாத்ஸல்ய ஸிந்தோ ||
த்வாமேவாயம் வரவரமுநே சிந்தயந்நீப்ஸதித்வாம் |
ஆர்த்தம் ஸ்ரீமந் க்ருபணமபி மாம் அர்ஹஸித்ராதுமேவ || 43

பொறுமை, உறுதி, மனோதிடம், ஸமத்வ புத்தி, நன்னடத்தை, அன்பு இவைகளுக்குக் கடல்போன்ற வரவரமுநியே! பாபம் நிறைந்த ஜனங்களுக்கு சுபத்தையே விரும்புகின்ற திருவுள்ளத்தைப் படைத்த உம்மையே நினைத்து விரும்பும் துக்கத்தால் பீடிக்கப்பட்ட இந்த க்ருபணனையும் ரக்ஷிக்கத் தகுந்தவராகிறீர்.

दोषैकान्ती दुरितजलधिर्देशिको दुर्मतीनां |
मूढो जन्तुर्ध्रुवमयमिति श्रीमता मोचनीय: ||
पादूयुग्मं भवदनुचरैरर्पितं  भक्तिनम्रे |
मौलौ कृत्वा वरवरमुने वर्ततां  तत्र धन्यः || ४४॥

தோஷைகாந்தீ துரித ஜலதி: தேசிகோ துர்மதீநாம் |
மூடோ ஜந்து: த்ருவமயமிதி ஸ்ரீமதா மோசநீய: ||
பாதூயுக்மம் பவதநுசரை: அர்ப்பிதம் பக்தி நம்ரே |
மௌலௌ  க்ருத்வா வரவரமுநே வர்த்ததாம் தத்ர தந்ய: || 44

தோஷங்கள் நிறைந்தவன், பாபக்கடல், கெட்ட புத்தி உள்ளவர்களுக்குக்  குரு, இந்தப் ப்ராணி மூடன் என்று நினைத்து தேவரீரால் விடத்தக்கவன்; உமது பக்தர்களால் பக்தியால் வணங்கி தலையில் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளை வைத்து அதனால் தன்யனானேன்.  

नित्यं निद्राविगमसमये निर्विशङ्कैरनेकै: –
त्वन्नामैव श्रुतिसुमधुरं गीयमानं  त्वदीयैः  ||
प्रायस्तेषां प्रपदनपरो निर्भरस्त्वत्प्रियाणां |
पादाम्भोजे वरवरमुने ! पातुमिच्छाम्याहं ते || ४५॥

நித்யம் நித்ரா விகம  ஸமயே நிர்விஷங்கைரநேகை: –
த்வந்நாமைவ ச்ருதி ஸுமதுரம் கீயமாநம் த்வதீயை: ||
ப்ராயஸ் தேஷாம் ப்ரபதந பரோ நிர்ப்பரஸ் த்வத் ப்ரியாணாம் |
பாதாம்போஜே  வரவரமுநே! பாதுமிச்சாம்யஹம் தே || 45

தினந்தோறும் தூங்கப் போகும்போதும் உம்முடையதான பல சங்கைகளால் காதுக்கு இனிமையான  உமது திரு நாமத்தையே பாடிக்கொண்டு உமது அன்பர்களான அவர்களின் ப்ரபத்தியில் நோக்கமுள்ளவனாக நிர்ப்பரனாக நான் உமது திருவடித்தாமரைகளையே பானம் பண்ண விரும்புகிறேன்.             

अन्तःस्वान्तं कमपि मधुरं मन्त्रमावर्तयन्तीम्
उद्यद्बाष्पस्तिमितनयनामुज्झिताशेषवृत्तिम् ||
व्याख्यागर्भं वरवरमुने ! त्वन्मुखं वीक्षमाणां |
कोणे लीनः क्वचिदनुरसौ संसदं तामुपास्ताम् || ४६॥

அந்தஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரமாவர்த்தயந்தீ –
முத்யத்பாஷ்பஸ்திமிதநயநாமுஜ்ஜிதாசேஷவ்ருத்திம் ||
வ்யாக்யாகர்ப்பம் வரவரமுநே த்வன்முகம் வீக்ஷமாணாம் |
கோணே லீந: க்வசிதநுரஸௌ ஸம்ஸதம் தாமுபாஸ்தாம் || 46

உள்ளத்துக்குள்ளேயே ஓர் இனிமையான மந்த்ரத்தை உருச் சொல்லிக்கொண்டு வெளிக்கிளம்புகிற அசைவற்றுக் கிடக்கிற கண் விழிகளை உடையதாயும் மற்றெல்லாத் தொழில்களையும் விட்டு, வரவரமுநியே! விளக்கிக் கூறுகிற உமது முகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிற அந்த கோஷ்டியில் ஒரு மூலையில் இருக்க வேண்டும்.

आबिभ्राणश्चरणयुगलीमर्पितां त्वत्प्रसादात् –
वारंवारं वरवरमुने ! वन्दमानेन मूर्ध्ना ||
शृण्वन्वाचः श्रुतिशतशिरस्तत्वसञ्जीविनीस्ते |
पश्यन्मूर्तिं परिषदि सतां प्रेक्षणीयो भवेयम् || ४७॥

ஆபிப்ராண: சரணயுகளீமர்ப்பிதாம் த்வத் ப்ரஸாதாத் –
வாதம் வாதம் வரவரமுநே வந்தமாநேந மூர்த்நா ||
ச்ருண்வண்வாச: ச்ருதி சத சிரஸ் தத்வ சஞ்ஜீவிநீஸ்தே |
பச்யந் மூர்த்திம் பரிஷதி ஸதாம் ப்ரேக்ஷணீயோ பவேயம் || 47

வரவரமுநியே! உமது அருளால் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளையும் வணங்குகிற தலையால் அடிக்கடி சுமந்துகொண்டு, உமது பல உபநிஷத் வாக்யங்களின் உண்மைப் பொருளை விவரிக்கின்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு, உமது திருமேனியைப் பார்த்துக்கொண்டு பெரியோர்கள் அவையில் பார்க்கத்  தக்கவனாக வேணும்.

काले यस्मिन्कमलनयनं देवमालोकयिष्यन् –
निर्यासि त्वं वरवरमुने ! नित्ययुक्तैस्त्वदीयैः ||
अग्रे नृत्यन्नयमपि तदा गाहतां हर्षसिन्धौ |
मज्जम्मज्जम्मधुवनजुषां  वैभवं यूथपानाम् || ४८॥

காலேயஸ்மின் கமலநயனம் தேவமாலோகயிஷ்யன் –
நிர்யாஸித்வம் வரவரமுநே நித்யயுக்தைஸ்த்வதீயை : ||
அக்ரே ந்ருத்யந்நயமபி ததா காஹதாம் ஹர்ஷ ஸிந்தௌ
மஜ்ஜம் மஜ்ஜம் மதுமதந ஜூஷாம் வைபவம் யூதபாநாம் || 48

எந்த சமயத்தில் புண்டரீகாக்ஷனான எம்பெருமானை ஸேவிக்க உம்முடன் தினந்தோறும் கூடியிருக்கிற அடியார்களுடன் நீர் புறப்படுகிறீரோ அந்த சமயம் உமக்கு எதிரில் இந்த அடியேனும் கூத்தாடிக் கொண்டு ஆனந்தக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து மது வனத்தை அநுபவித்த வானரர்களுடைய வைபவத்தை நினைத்துப் ப்ரவேசிக்கட்டும்.             

भूत्वा पश्चात्पुनरयमथ व्योम्नि गोपायमानो |
भ्रूयः पार्श्वद्वितयसुषमासागरं गाहमानः ||
जल्पन्नुच्छैर्जयजय विभो ! जीवजीवेति वाचं |
शंसन्मार्गं वरवरमुने ! सौविदल्लो भवेयम् || ४९॥

பூத்வா பச்சாத் புநரயமத வ்யோம்நி  கோபாய மாநோ |
பூய: பார்ச்வத்விதய ஸுஷமா ஸாகரம் காஹமாந: ||
ஜல்பந்நுச்சை: ஜயஜய விபோ ஜீவ ஜீவேதி வாசம்  |
சம்ஸந் மார்க்கம் வரவரமுநே ஸௌவிதல்லோபவேயம் || 49

பிறகு ஆகாயத்தில் க்ரஹம் போல மறுபடி பின்புறத்தில் வந்து இரண்டு பக்கங்களிலும் காந்திக் கடலில் ப்ரவேசித்து உரத்த குரலில் ப்ரபுவே! நீ வாழ வேண்டும், வெற்றி உண்டாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு உமது வழியில் வழிகாட்டியாய் இருக்கக் கடவேன்.

देवी गोदा यतिपतिशठद्वेषिणौ रङ्गशृङ्गं |
सेनानाथो विहगवृषभः श्रीनिधिस्सिन्धुकन्या ||
भूमानीलागुरुजनवृतः पूरुषश्चेत्यमीषा –
मग्रे  नित्यं वरवरमुनेरङ्घ्रियुग्मं प्रपद्ये || ५०॥ 

தேவீ கோதா யதிபதி சடத்வேஷிநௌ ரங்கச்ருங்கம் |
ஸேநா நாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா ||
பூமா நீளா குருஜந வ்ருத: பூருஷச்சேத்ய மீஷாம் |
அக்ரே நித்யம் வரவரமுநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 50

தேவத்தன்மை குன்றாத கோதை, எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்க விமானம், சேனை முதலியார், பக்ஷி ச்ரேஷ்டனான ஸ்ரீ பெரிய திருவடி, பெருமாள், பிராட்டி, ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி முதலிய ஆசார்யர்களுடன் கூடிய புருஷன், இவர்கள் எல்லார் எதிரிலும் தினந்தோறும் உமது திருவடிகளைச் சரணாகதி அடைகிறேன்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment