யதிராஜ விம்சதி – ச்லோகம் – 4

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்  3                                                                                                                         ச்லோகம் 5

ச்லோகம் 4

नित्यं यतीन्द्र तव दिव्यवपुस्स्म्रुतौ मे सक्तम् मनो भवतु वाग्गुणकीर्तनेSसौ
क्रुत्यञ्च दास्यकरणं तु करद्वयस्य व्रुत्त्यन्तरेSस्तु विमुखं करणत्रयञ्च ॥ (4)

நித்யம் யதீந்த்ரதவ திவ்யவபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோபவது வாக்குணகீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச ||

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே, மே – அடியேனுடைய, மந: – மனமானது, தவ – தேவரீருடைய, திவ்யவபு: ஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில், நித்யம் – எப்போதும், ஸக்தம் – பற்றுடையதாக, பவது – இருந்திடுக. அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது, தவ – தேவரீருடைய, குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில், ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக. மே – அடியேனுடைய, கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும், தவ – தேவரீருக்கு, தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே, க்ருத்யம் – கடமையாக, அஸ்து – இருந்திடுக. மே – அடியேனுடைய, கரணத்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும், வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில், விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

கருத்துரை:- கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர், அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம், மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு, அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது. இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும், நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று. பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள். க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி. முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment