யதிராஜ விம்சதி – ச்லோகம் – 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்  2                                                                                                                           ச்லோகம் 4

ச்லோகம் 3

वाचा यतीन्ड्र मनसा वपुषा च युष्मत्पादारविन्दयुगलं भजतां गुरूणाम् ।
कूराधिनाथकुरुकेशमुखाध्यपुंसां पादानुचिन्तनपरस्सततं भवेयम् ॥ 3

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம் || 3

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, மநஸா – மனத்தினாலும், வாசா – நாவினாலும், வபுஷா – தேஹத்தினாலும், யுஷ்மத் – தேவரீருடைய, பாதாரவிந்தயுகளம் – தாமரைமலர் போன்ற திருவடிகளின் இரட்டையை, பஜதாம் – ஸேவித்துக் கொண்டிருக்கிற, குரூணாம் – ஆசார்யர்களாகிய, கூராதிநாதகுருகேஸமுக ஆத்யபும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய், ஸததம் பாத அநுசிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக, பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

கருத்துரை:- மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு, அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். கூராதிநாதர்-கூரத்தாழ்வான். குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான். முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க. குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை இந்த குருஸப்தம் குறிக்கும். மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும். இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும். பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால் பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய், பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும் அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும். அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும். பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால் கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று, யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும். (3)

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment