வரவரமுனி சதகம் – பகுதி 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 1

त्वम्मे बन्धुस्त्वमसि जनकस्त्वं सखा देशिकस्त्वम् |
विद्या वृत्तं सुकृतमतुलं वित्तमप्युत्तमं त्वम् ||
आत्मा शेषी भवसि भगवन् ! आन्तरश्शासिता त्वं |
यद्वा सर्वं वरवरमुने! यद्यदात्मानुरूपं || ११   ||

த்வம் மே பந்து: த்வமஸி ஜநக: த்வம் ஸகா தேஷிகஸ்த்வம் |
வித்யா வ்ருத்தம் ஸுக்ருதமதுலம் வித்தமப்யுத்தமம் த்வம் ||
ஆத்மாஷேஷீ பவஸி பகவந் ஆந்தர: ஷாஸிதாத்வம் |
யத்வா ஸர்வம் வரவரமுநே! யத்யத் ஆத்மாநுரூபம். || 11||

நீரே எனக்கு உறவினரும், காரணபூதரும், தோழரும், ஆசிரியரும், கல்வியும், நன்னடத்தையும், நிகரில்லாத புண்யமும், சிறந்த தனமும், ஆத்மா என்னும் தாரகமும், தேவரீரே அடியேனை உள் இருந்து நியமிக்கும் ஸேஷியும், ஸேஷனுக்கு ஏற்ற எல்லாமும் ஆவீர்.

आम्नायेषु स्मृतिभिरमितैस्सेतिहासै: पुराणैः
दृश्यं यत्नैर्यदिह विदुषां देशिकानां प्रसादात्  ||
स्वैरालापैस्सुलभयसि तत्पञ्चमोपायतत्वम्
दर्शंदर्शं वरवरमुने दैन्यमस्मद्विधानाम् || १२॥

ஆம்நாயேஷு ஸ்ம்ருதிபிரமிதைஸ் ஸேதிஹாஸை : புராணை:
த்ருஷ்யம் யத்நை: யதிஹ விதுஷாம் தேஷிகாநாம் ப்ரஸாதாத் ||
ஸ்வைராலாபைஸ் ஸுலபயஸி தத் பஞ்சமோபாய தத்வம்
தர்ஷம் தர்ஷம் வரவரமுநே தைந்யம் அஸ்மத் விதாநாம். || 12||

அளவற்ற ஸ்ம்ருதிகளாலும் இதிஹாசங்களுடன் கூடிய புராணங்களாலும் அறிஞர்களான ஆசார்யர்களுடைய கருணையாலும் முயற்சிகளாலும் எது அறியப்படுகிறதோ அந்த ஐந்தாவது (பஞ்சம உபாயம்) உபாயத்தின் உண்மையை என்னைப் போன்றவர்களின் எளிமையைப் பார்த்துப் பார்த்து ஸாதாரண பேச்சுகளால் எளிதாகப் புரியச் செய்கிறீர்!

सत्सम्बन्धो भवति हितमित्यात्मनैवोपदिष्टं |
शिष्टाचारं दृढयितुमिह श्रिसखो रङ्गधुर्यः ||
द्वारं प्राप्य प्रथितविभवो देवदेवस्त्वदीयं |
दृष्ट्वैव त्वां वरवरमुने दृश्यते पूर्णकामः || १३॥

ஸத்ஸம்பந்தோ பவதி ஹிதமித்யாத்மநைவோபதிஷ்டம் |
ஷிஷ்டாசாரம் த்ருடயிதுமிஹ ஸ்ரீ ஸகோ ரங்கதுர்ய: ||
த்வாரம் ப்ராப்ய ப்ரதித விபவோ தேவ தேவஸ்த்வதீயம் |
த்ருஷ்ட்வைவத்வாம் வரவரமுநே த்ருஷ்யதே பூர்ண காம:  || 13||

நல்லோர் உறவு உபாயமாகிறது என்று தாம் உபதேசித்த சிஷ்டாசாரத்தை உறுதிப்படுத்த பெரிய பிராட்டியுடன் கூடிய ஸ்ரீரங்கநாதன் ப்ரஸித்த மஹிமை உடைய தேவதேவர் உமது வாயிற்படியை அடைந்து உம்மை ஸேவித்த பின்பே பூர்த்தி அடைந்த எண்ணம் உடையவராகக் காணப்படுகிறார்.

सोऽयम्भूयस्स्वयमुपगतो देशिकैस्संसदं ते |
श्रुत्वा गूढं शठरिपुगिरामर्थतत्वं त्वदुक्तम् ||
आगोपालं प्रथयतितरामद्वितीयं त्वदीयं |
वाचां दूरं वरवरमुने वैभवं शेषशायी || १४॥

ஸோயம் பூய: ஸ்வயமுபகதோ தேஷிகைஸ் ஸம்ஸதம் தே|
ஷ்ருத்வா கூடம் ஷடரிபு  கிராமர்த்ததத்வம் த்வதுக்தம் ||
ஆகோபாலம் ப்ரதயதிதராமத்விதீயம் த்விதீயம்|
வாசாம் தூரம் வரவரமுநே வைபவம் ஷேஷஷாயீ ||  14||

அப்படிப்பட்ட இந்த அரவணைப் பள்ளியான் மறுபடி உம்மை ஆசார்யராக அடைந்து உம்மால் கூறப்பட்ட ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளின் உண்மைப் பொருளை ரஹஸ்யத்தில் கேட்டு நிகரில்லாத வாக்குக்கு எட்டாத உமது வைபவத்தை மூடரும் அறியப் பரவச் செய்கிறார்.

सिद्धोपायस्त्वमिह सुलभो लम्भयन्पूरुषार्था-
नज्ञातांश्च प्रथयसि पुनः यत्ततो देशिकस्त्वम् ||
देवी लक्ष्मी भवसि दयया वत्सलत्वेन च त्वं |
कोसौ यस्त्वां वरवरमुने! मन्यते नात्मानीनम् || १५॥

ஸித்தோபாயஸ்த்வமிஹ ஸுலபோ லம்பயந் பூருஷார்த்தாந்
அஞ்ஞாதாஷ்ச க்ரதயதி புந: யத்ததோ தேஷிகஸ்த்வம் ||
தேவீ லக்ஷ்மீர் பவஸி தயயா வத்ஸலத்வேந ஸத்வம் |
கோஸௌ யஸ்த்வாம் வரவரமுநே மந்யதேநாத்மநீநம். ||  15||

இப்போது புருஷார்த்த லாபத்தைச் செய்துகொண்டு சுலபமான ஸித்தோபாயமான நீர் அறியாதவைகளை அறிவிப்பிக்கிறீர். ஆகையால் நீர் ஆசார்யராகவும் இருக்கிறீர். வாத்ஸல்யத்தாலும் கருணையாலும் பிராட்டி தேவி ஆகிறீர். வரவர முநியே! உம்மைத் தம்முடையனாக நினைக்காதவன் யார்?

नित्यं पत्युः परिचरणतो वर्णतो निर्मलत्वात्
वृत्या वाचां निबुधसरितश्चातुरीमुद्गिरन्त्या ||
शेषः श्रीमानिति रघुपतेरन्तरेणाऽपि वाणीः
को नाम त्वां वरवरमुने कोविदो नावगन्तुम् || १६॥

நித்யம் பத்யு: பரிசரணதோ வர்ணதோ நிர்மலத்வாத் |
வ்ருத்யா வாசாம் விபூதசரிதஸ் சாதுரீமுத்கிரந்த்யா ||
ஷேஷ ஸ்ரீமாநிதி ரகுபதேரந்தரேணாபி வாணீ: |
கோ நாமத்வாம் வரவரமுநே கோவிதோ நாவ கந்தும்.||  16||

தினந்தோறும் சேஷியானவனுக்குப் பணிவிடை செய்வதாலும் சுத்தமான நிறம் பெற்றிருப்பதாலும் தேவ கங்கையின் திறமையை வெளிப்படுத்துகின்ற வாக்கின் தன்மையாலும் சேஷன் ஸ்ரீமாந் என்று ரகுபதியான ஸ்ரீராமருடைய வார்த்தையை விட்டு எவர்தான் உம்மை அறிய ஸமர்த்தன்?      

सत्यं सत्यं पुनरिति पुरा सारविद्भिर्यदुक्तं |
ब्रूमश्श्रोत्रैश्शृणुत सुधियो मत्सरं वर्जयित्वा ||
तत्वं विष्णुः परमनुपमं तत्पदं प्राप्यमेवं |
तत्सम्प्राप्तौ वरवरमुनेर्देशिको दीर्घदर्शी || १७॥

ஸத்யம் ஸத்யம் புநரிதிபுரா ஸாரவித்பிர்யதுக்தம் |
ப்ரூம ஸ்ரோத்ரை: ஷ்ருணுத ஸுதியோ மத்ஸரம் வர்ஜயித்வா ||
தத்வம் விஷ்ணு: பரமநுபமம் தத்பதம் ப்ராப்யமேவம் |
தத் ஸம்ப்ராப்தௌ வரவரமுநி: தேஷிகோ தீர்க்கதர்சீ:  || 17||

ஸாரத்தை அறிந்தவர்களால் முன்பு உண்மை உண்மை என்று எது கூறப்பட்டதோ சொல்லுகிறோம் காதுகளால் கேளுங்கள் புத்திமான்களே! பகைமையை வீட்டுக் கேளுங்கள்; விஷ்ணுவே உண்மைப் பொருள், அவர் திருவடியே அடைய வேண்டியது, இப்படியே அதை அடைவதில் தீர்க்க தர்சியான ஆசார்யர் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.

लक्ष्यं यस्ते भवति भगवंश्चेतसश्चक्षुषो  वा |  
तुभ्यं द्रुह्यन्त्यपि कुमतयो ये वृथा मत्सरेण ||
मुक्तिं गच्छेन्मुषितकलुषो मोहमुध्दूय सोऽयं |
नानाभूतान्वरवरमुने नारकान्प्राप्नुयुस्ते || १८॥

லக்ஷ்யம் யஸ்தே பவதி பகவந் சேதஸஸ் சக்ஷுஷோ வா |
துப்யம் த்ருஹ்யந்த்யபி குமதயோ யே வ்ருதா மத்ஸரேண ||
முக்திம் கச்சேந்முஷித கலுஷோ மோஹமுத்தூய ஸோயம் |
நாநா பூதாந்  வரவரமுநே நாரகான் ப்ராப்நுயுஸ்தே. || 18||

ஹே பகவந்! உமது திருவுள்ளத்திற்கோ அல்லது பார்வைக்கோ எவன் குறியாகிறானோ அவன் பாபத்தைத் துறந்து மோகத்தை விட்டு மோக்ஷத்தை அடைவான். உம்மை வீணாக த்வேஷத்துடன் பார்த்த கெட்ட புத்தியுடன் த்ரோஹம் செய்பவர்கள் பலவகைப்பட்ட நரக துன்பத்தை அனுபவிப்பார்கள்.

स्वप्नेऽपि त्वत्पदकमलयोरञ्जलिं कल्पयित्वा |
श्रुत्वा यद्वा सकृदपि विभो ! नामधेयं त्वदीयम् ||
निष्प्रत्यूहं वरवरमुने! मानवः कर्मबन्धान् |
भस्मीकृत्य प्रविशति परं प्राप्यमेव प्रदेशम् || १९॥

ஸ்வப்நேபி த்வத் பத கமலயோரஞ்ஜலிம்  கல்பயித்வா |
ஷ்ருத்வா யத்வா ஸக்ருதபி விபோ நாமதேயம் த்வதீயம் ||
நிஷ்ப்ரத்யூஹம் வரவரமுநே மாநவ: கர்ம பந்தாந் |
பஸ்மீ க்ருத்ய பிரவிஷதி பரம் ப்ராப்யமேவ ப்ரதேஷம்.||  19||

உமது திருவடித் தாமரைகளில் கனவிலும் அஞ்ஜலி செய்தவன் அல்லது உமது திருநாமத்தை ஒரு தடவை கேட்டவனும் தடையினின்றி ஹே வரவரமுநியே! கர்ம பந்தங்களைச் சாம்பலாக்கி மிகவும் அடைய வேண்டிய இடத்தையே அடைகிறான்.

यस्मिन् किञ्चिद्विधिरपि यथा वीक्षितुं न क्षमः स्यात् |
वक्तुं शक्तः क इह भगवन्  ! वैभवं तत्त्वदीयम् ||
यस्सर्वज्ञः स खलु भगवानीक्षते तत्समग्रं |
तस्याऽपि त्वं वरवरमुने ! मन्यसे तत्वमेकः || २०॥ 

யஸ்மிந் கிஞ்சித் விதி ரபி  யதா வீக்ஷிதும் ந க்ஷம:ஸ்யாத் |
வக்தும் ஷக்த: க இஹ பகவந் வைபவம் தத் த்வதீயம் ||
ய: ஸர்வஜ்ஞ: ஸகலு பகவாந் ஈக்ஷதே தத் ஸமக்ரம் |
தஸ்யாபித்வம் வரவரமுநே மந்யஸே தத்வமேக: || 20||

எந்த விஷயத்தில் கொஞ்சம் ப்ரம்ஹனும் பார்ப்பதற்குத் திறமையற்றவனாகிறானோ ஹே பகவானே! அந்த விஷயத்தில் உமது மஹிமையை யார் சொல்ல வல்லவன்? எல்லாமறிந்த அந்த பகவானே அதை எல்லாம் பார்க்கிறான். அதற்கும் நீர் ஒருவரே தத்வமாக நிற்கிறீர்.      

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment