யதிராஜ விம்சதி – ச்லோகம் – 8

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 7                                                                                                                          ச்லோகம் 9

ச்லோகம் 8 

दुःखावहोहमनिशं तव दुष्टचेष्टः शब्दादिभोगनिरतः शरणागताख्यः ।
त्वत्पादभक्त इव शिष्टजनैघमध्ये मिथ्या चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (8)

து:காவஹோSஹமநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:|| (8)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய், ஸப்தாதி போகநிரத: – ஸப்தாதி நீசவிஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய், துஷ்டசேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கியகெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (அதனால்) தவ – தேவரீருக்கு, து: ஆவஹ: – துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற, அஹம் – அடியேன், த்வத் பாத பக்த: இவ – தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட ப்ரபந்நன்போல், சிஷ்டஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில், மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன், தத: – அக்காரணத்தினால், மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன், தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தையுண்டாக்குமாகையால் அவ்வூற்றத்தை நஸிப்பித்தருளவேணுமென்று வேண்டுகிறாரிதனால். யதிராஜர் – மனத்தையடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மனவடக்கத்தாலே மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி. ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனேயொழிய, ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி. ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல், தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல், தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல், வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம். து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதிபோக நிரதனாய் துஷ்டசேஷ்டனாயிருப்பது – ‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி. அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர்படைத்திருப்பதினால் இவனைக்காக்கவேணுமோ, துஷ்டசேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிடவேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்மசங்கடமாகிய துக்கத்தையுண்டாக்குமென்றும் சொல்லலாம். மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான்பிடித்தது விடாமலிருக்குமவன். இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment