வரவரமுனி சதகம் 10

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 9

Image result for manavala mamunigal vaanamaamalai

मुग्धालोकं मुखमनुभवन्मोदते नैव देव्याः |
स्निग्धालापं कपिकुलपतिं नैव सिञ्चत्यपाङ्गैः ||
त्वामेवैकं वरवरमुने ! सोदरं द्रष्टुकामो |
नाथो नैति क्वचिदपि रतिं दर्शने यूथपानाम् || ९१॥

முக்தாலோகம் முகமநுபவந் மோததே நைவ தேவ்யா: |
ஸ்நிக்தா லாபம் கபிகுலபதிம் நைவ ஸிஞ்ச்யத்யபாங்கை:||
த்வாமேவைகம் வரவரமுநே ஸோதரம் த்ரஷ்டு காமோ:|
நாதோ நைதி க்வசிதபி ரதிம் தர்சநே யூதபாநாம் ||  91

அழகிய பார்வையுடன் கூடிய தேவியான பிராட்டியின் முகத்தை அநுபவித்து ஸந்தோஷிப்பதில்லை. அன்பு நிறைந்த பேச்சாளரான ஸுக்ரீவனையும் கடாக்ஷங்களால் நனைப்பதில்லை. ஹே வரவரமுநியே! உம்மை ஒருவரையே, ஸஹோதரனை, பார்க்க விரும்பி முதலிகள் தலைவரான ஸ்ரீராமன் ஓரிடத்திலும் மகிழ்ச்சியைப் பெறுவதில்லை.

एवं देवः स्वयमभिलशन्नेष ते शेषवृत्तिं |
जज्ञे भूयस्त्वदनुजगदानन्दनो नन्दसूनुः ||
दूरिभावं वरवरमुने ! दुस्सहं पूर्वजस्ते |
धन्यस्त्यक्त्वा धयतु न चिराच्छाक्षुषा राघवस्त्वाम् || ९२॥

ஏவம் தே ஸ்வயமபிலஷந் நேஷ தே ஸேஷவ்ருத்திம் |
ஜஃனே பூய: ததநு ஜகதாநந்தநோ நந்த ஸூநு: ||
தூரீ பாவம் வரவரமுநே துஸ்ஸஹம் பூர்வஜஸ்தே |
தந்யஸ் த்யக்த்வா தயது ந சிராத் சக்ஷுஸா ராகவஸ் த்வாம் ||  92

இந்த மாதிரி தேவரான ஸ்ரீராமர் தாமாகவே செய்ய விரும்பி மறுபடி உலகத்துக்கு ஆனந்தத்தை அளிக்கவல்ல நந்தகுமாரனாக ஆனார். ஹே வரவரமுநியே! பொறுக்க முடியாத இந்தப் பெருமையை உமது தமையனான ஸ்ரீராமர் விட்டுக் கண்ணால் உம்மை மகிழ்விக்கட்டும்.

पारम्पायं प्रणयमधुरे पादपद्मे त्वदीये |
पश्येयं तत्किमपि मनसा भावयन्तं भवन्तम् ||
कामक्रोधप्रकृतिरहितैः काङ्क्षितत्वत्प्रसादैः |
सद्भिस्साकं वरवरमुने ! सन्ततं वर्तिषीय || ९३॥

பாயம் பாயம் ப்ரணய மதுரே பாத பத்மே த்வதீயே |
பச்யேயம் தத் கிமபி மநஸா பாவயந்தம் பவந்தம் ||
காமக்ரோத ப்ரக்ருதி ரஹிதை: காங்க்ஷித த்வத் பிரஸாதை: |
ஸத்பிஸ்ஸாகம் வரவரமுநே! ஸந்ததம் வர்த்திஷீய || 93

அன்பு கனிந்த உமது திருவடித் தாமரையைப் பருகிப் பருகி, எதையோ மனத்தால் நினைத்துக்கொண்டிருக்கும் உம்மைப் பார்க்க வேண்டும். காமத்துக்கும் கோபத்துக்கும் ப்ரக்ருதியில்லாத, வேண்டிய உமது அருள் பெற்ற நல்லவர்களோடு எப்போதும் இருக்கவேண்டும், வரவரமுநியே!

पश्यत्वेनं जनकतनया पद्मगर्भैरपाङ्गैः
प्रारब्धानि प्रशमयतु मे भागधेयं रघूणाम् ||
 आविर्भूयादमलकमलोदग्रमक्ष्णोः पदं मे-
दिव्यं तेजो वरवरमुने ! देवदेव ! त्वदीयम् || ९४॥

பச்யத்வேநம் ஜநகதநயா பத்மகர்பைரபாங்கை: |
ப்ராரப்தாநி ப்ரஸமயது மே பாகதேயம் ரகூணாம் ||
ஆவிர் பூயா தமல கமலோ தக்ர மக்ஷ்னோ: பதம் மே |
திவ்யம் தேஜோ வரவரமுநே  ஸந்ததம் வர்த்திஷீய || 94

என்னைப் பிராட்டி குளிர்ந்த கடாக்ஷங்களால்  பார்க்கவேண்டும். ஸ்ரீராமர் எனது ப்ராரப்த பாபங்களை ஒழிக்கட்டும். வரவரமுநியே! எனது கண்களுக்கு உமது நிர்மலமான தாமரை  போன்ற ஒளி எதிரில் எப்போதும் தோன்றுவதாக.

रामः श्रीमान्रविसुतसखो वर्द्धतां यूथपालैः
देवीं तस्मै दिशतु कुशलं मैथिली नित्ययोगात् ||
सानुक्रोशो जयतु जनयन् सर्वतस्तत्प्रसादं |
सौमित्रिर्मे स खलु भगवान्सौम्यजामातृयोगी || ९५॥

ராம: ஸ்ரீமாந் ரவி ஸுத ஸ கோ வர்த்ததாம் யூத பாலை: |
தேவீ தஸ்மை திசது குசலம் மைதிலீ நித்ய யோகாத் ||
ஸாநுக்ரோஶோ ஜயது ஜநயந் ஸர்வதஸ் தத் ப்ரஸாதம் |
ஸௌமித்ரிர் மே ஸகலு பகவாந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ || 95

ஸுக்ரீவ நண்பனான அந்த ஸ்ரீராமர் வாநர முதலிகளுடன் ஓங்கட்டும். நித்யம் உடனிருந்து பிராட்டி க்ஷேமத்தை அளிக்கட்டும். எல்லா வகையிலும் அவர் அருள் கூடிய ஸுமித்ரா புத்ரரான (உமக்கு) மணவாள மாமுனிகளுக்கு வெற்றி உண்டாகட்டும்.

यस्मादेतद्यदुपनिषदामप्रमेयं प्रमेयं |
कुर्वाणस्तत्सकलसुलभं कोमलैरेव वाक्यैः ||
नीरोगस्त्वं वरदगुरुणा नित्ययुक्तो धरित्रीं |
पाहि श्रीमन् ! वरवरमुने ! पद्मयोनेर्दिनानि || ९६॥

யஸ்மா தேதத் யதுப நிஷாதாம் அப்ரமேயம் ப்ரமேயம் |
குர்வாணஸ் தத் ஸகல ஸுலபம் கோமளைரேவ வாக்யை: ||
நீரோகஸ்த்வம் வரத குருணா நித்ய யுக்தோ தரித்ரீம் |
பாஹி ஸ்ரீமந் வரவரமுநே பத்ம யோநேர் திநாநி || 96

ஹே ஸ்ரீமானான வரவரமுநியே! எதிலிருந்து இந்த உலகம் ஏற்பட்டதோ, எது உபநிஷத்துகளுக்கும் எட்டாத விஷயமோ அதை ம்ருதுவான வார்த்தைகளால் எல்லாருக்கும் எளிதாக்கிக்கொண்டு நீர் ரோகமற்றவராக வரத குருவுடன் நித்யமாகச் சேர்ந்துகொண்டு இந்த பூமியை ப்ரஹ்மாயுள் உள்ளவரை பாலநம் செய்வீராக.

अपगतमतमानैः अन्तिमोपाय निष्टैः
अधिगतपरमार्थैः अर्थकामान्  अपेक्षैः ||
निखिलजनसुहृद्भिः निर्जित क्रोध लोभैः
वरवरमुनि भृत्यैः अस्तु मे नित्य योगः || ९७॥

அபகத கதமாநைரந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தைரர்த்த காமாநபேக்ஷை: ||
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவரமுநி ப்ருத்யை ரஸ்து மே நித்ய யோக:|| 97

மதம் மானம் என்று சொல்லக்கூடிய துர்க்குணங்களற்றவர்கள், சரமோபாயம் என்று சொல்லக்கூடிய ஆசார்ய நிஷ்டை உள்ளவர்கள், உண்மைப் பொருள் அறிந்தவர்கள், அர்த்தம் காமம் இவற்றை வெறுத்தவர்கள், எல்லா ஜனங்களுக்கும் நண்பர்களாயுள்ளவர்கள், –இவர்களுடன் எனக்கு ஸம்பந்தம் நித்யமாக இருக்கவேண்டும்.

वरवरमुनिवर्य चिन्तामहन्तामुषम् तावकीम्-
अविरतमनुवर्तमानानुमानावमानानिमान्  ||
निरुषधिपदभक्तिनिष्ठाननुष्ठाननिष्ठानहं |
प्रतिदिनमनुभूय भूयो न भूयासमायासभूः || ९८॥

வரவரமுநிவர்ய சிந்தா மஹம் தாம் உஷம் தாவகீம்
அவிரதமநுவர்த்த மாநா நமாநா வ மாநா நிமாந் ||
நிரவதி பத பக்தி நிஷ்டாந் அநுஷ்டா நநிஷ்டாநஹம்
ப்ரதி திந மநு பூய பூயோ ந பூயாஸ மாயா ஸ பூ: || 98

வரவரமுநியே! உமது விஷயமான சிந்தையை எப்போதும் அநுபவித்துக்கொண்டு ஓயாது அஹங்காரம் அவமானம் இவைகளை விட்டு உமது திருவடிகளில் பக்தி செலுத்துகின்ற அநுஷ்டான நிஷ்டர்களான இந்த பாகவதர்களை தினந்தோறும் அநுபவித்துக்கொண்டு மறுபடியும் ச்ரமத்துக்குக் காரணம் ஆகாதவனாக ஆகக் கடவேன்.

वरवरमुनिवर्यपादावुपादाय सौदामिनी-
विलसतिविभवेषु वित्तेषु पुत्रेषु मुक्तेषणाः ||
कतिचन यतिवर्यगोष्ठीबहिष्ठीकृतष्ठीवना |
निजहति जनिमृत्युनित्यानुवृत्या यदत्याहितम् || ९९॥

வரவரமுநிவர்ய பாதாவுபாதாய ஸௌதாமிநீ
விலஸித விபவேஷு வித்தேஷு புத்ரேஷு முக்தேஷணா: ||
கதி ச நயதி வர்ய கோஷ்டீ பஹிஷ்டீ க்ருதஷ்டீ வநா:
விஜஹதி ஜநி ம்ருத்யு நித்யாநுவ்ருத்யாய தத்யாஹிதம் || 99

வரவரமுநியே! உமது திருவடிகளைச் சரணமாக ஏற்று, மின்னல்போல் விளங்குகிற பெருமைகளிலும், தனங்களிலும், புத்ரர்களிடத்திலும் ஆசையை விட்டவர்களுக்கு எம்பெருமானாருடைய கோஷ்டியிலிருந்து கொண்டு சிலர் பிறவி மரணம் இவை தொடர்ந்து வருவதால் ஏற்படும் பயத்தை விடுகிறார்கள்.

निरवधिनिगमान्तविद्यानिषद्यानवद्यशयान् |
यतिपतिपदपद्मबन्धानुबन्धानुसन्धायिनः ||
वरवरमुनिवर्यसम्बन्धसम्बन्धसम्बन्धिनः |
प्रतिदिनमनुभूय भूयो न भूयासमायासभूः || १००॥

நிரவதி நிகமாந்த வித்யா நிஷத்யாந வத்யாசயான் |
யதிபதி பத்ம பந்தாநு பந்தாநு ஸந்தாயிந: ||
வரவர முநிவர்ய ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்தின: |
ப்ரதிதிநமநுபூய பூயோ ந பூயாஸமாயாஸபூ: || 100

எல்லையற்ற வேதாந்த வித்யையைக் கற்றவர்களும், குற்றமற்ற மனம் படைத்தவர்களும், எதிராசருடைய திருவடித்தாமரைகளில் ஸம்பந்தத்தை தினந்தோறும் நினைப்பவர்களும் (ஆன) – ஹே வரவரமுநியே! உமது ஸம்பந்தம் பெற்றவர்களையும் தினந்தோறும் அநுபவித்துக்கொண்டு மறுபடி ஆயாஸத்தை அடைந்தவன் ஆகமாட்டேன்.

यन्मूलमाश्वजमास्यवतारमूलं |
कान्तोपयन्तृयमिनः करुणैकसिन्धोः ||
आसीदसत्सु गणितस्य ममाऽपि सत्ता-
मूलम् तदेव जगदभ्युदयैकमूलम् || १०१॥

யன்மூலமாஸ்வயுஜமாஸ்யவதார மூலம் |
காந்தோ பயந்த்ரு யமிந:கருணைக ஸிந்தோ: ||
ஆஸீத ஸத்ஸுகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம் |
ததேவ ஜகதப்யுதயைக மூலம் || 101

கருணைக்கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசி மாதத்தில் எந்த மூலம் அவதாரத் திருநக்ஷத்ரம் ஆகிறதோ – அஸத் என்பவைகளில் கணக்கிடப்பட்ட எனக்கு ஸத்தைக்கு அதுவே காரணமாக ஆயிற்று, அதுவே ஜகத்துக்கு க்ஷேம காரணமாகவும் ஆகிறது.

यदवतरनमूलम्  मुक्ति मूलं प्रजानां |
शठरिपुमुनि दृष्ठाम्नाय साम्राज्य मूलम् ||
कलिकलुष समूलोन्मूलनेमूलमेतत् |
स भवतु वरयोगी नः समर्तार्थमूलम् || १०२॥

யதவதரணமூலம் முக்தி மூலம் ப்ரஜானாம் |
சடரிபு முநி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம் ||
கலி கலுஷ ஸமூலோன் மூலனே மூலமேதத் |
ஸ பவது வரயோகீ ந: ஸமர்த்தார்த்த மூலம் || 102

எந்த வரவரமுநி அவதாரத் திருநக்ஷத்ரமான மூலமானது ப்ரஜைகளுடைய முக்திக்கு காரணமாகவும், நம்மாழ்வாருடைய திவ்ய ஸூக்தியான ஸாம்ராஜ்யத்துக்கு மூலமாகவும் கலியுகத்தால் ஏற்பட்ட பாபத்தை வேருடன் களையக்  கூடியதாகவும் இருக்கிறதோ அப்படிப்பட்ட மணவாளமாமுனிகள் நமக்கு எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிறார்.

मूलं शठारिमुखसूक्तिविवेचानायाः |
कूलं कवेरदुहितुस्समुपागतस्य ||
आलम्बनस्य मम सौम्यवरस्य जन्म |
मूलं विभाति सतुलं वितुलश्च चित्रम् || १०३॥

மூலம் சடாரி முக ஸூக்தி விவேசநாயா: |
கூலம் கவேரதுஹிது: ஸமுபாகதஸ்ய ||
ஆலம்பநஸ்ய மம ஸௌம்ய வரஸ்ய ஜந்ம |
மூலம் விபாதி ஸதுலம் விதுலம் ச சித்ரம் || 103

ஆழ்வாருடைய திருமுகத்திலுதித்த வாக்குகளைப் பரிசீலிப்பதற்குக் காரணமாயும் காவேரி நதியின் கரையை அடைந்த எனது ஆலம்பனமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய அவதாரமான மூல திருநக்ஷத்ரம் துலா மாதத்துடன் கூடி நிகரற்றதாக, ஆச்சர்யமாக இருக்கிறது.

अनुदिनमनवद्यैः पद्यबन्धैरमीभिः –
वरवरमुनितत्वं व्यक्तमुद्धोषयन्तम् ||
अनुपदमनुगच्छनप्रमेयः श्रुतीनाम्-
अभिलषितमशेषं सयते  शेषशायी || १०४॥

அநுதிநமநவத்யை: பத்ய பந்தைரமீபி: |
வரவரமுநி தத்வம் வ்யக்த முத்கோஷயந்தம் ||
அநுபதமநுகச்சந் நப்ரமேயம் ச்ருதீநாம் |
அபிலஷித மஸேஷம் ச்ரூயதே ஸேஷசாயீ || 104

தினந்தோறும் குற்றமற்ற இந்த ச்லோகங்களால் மணவாள மாமுனிகளுடைய உண்மையை வெளிப்படையாகப் ப்ரகாசிப்பித்துக்கொண்டு அடிதோறும் பின்தொடர்ந்துகொண்டு வேதங்களுடைய அப்ரமேயமான வஸ்து(வான) ஸேஷ சாயீ கேட்கப் படுகிறார்.

जयतु यशसा तुङ्गं रङ्गं जगत्रयमङ्गलम् |
जयतु सुचिरं तस्मिन्भूमा रमामणिभूषणम् ||
वरदगुरुणा सार्द्धं तस्मै शुभान्यभिवर्द्धयन् |
वरवरमुनिः श्रीमान्रामानुजो जयतु क्षितौ || १०५॥

ஜயது யசஸா துங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம் |
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம் ||
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஸுபாந்யபிவர்த்தயந் |
வரவரமுநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயது க்ஷிதௌ || 105

உயர்ந்த கீர்த்தியையுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும். வெகு காலமாக அங்கே  பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும். வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்துகொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.

पठति शतकमेतत् प्रत्यहम् यः सुजानन् |
स हि भवति निधानं सम्पदामीप्सितानाम् ||
प्रशमयति विपाकं पातकानां गुरूणां |
प्रथयति च निदानं पारमाप्तुं  भवाब्धेः || १०६॥

படதி ஸததமேதத் ப்ரத்யஹம் ய: ஸுஜந்மா  |
ஸஹி பவதி நிதாநம் ஸம்பதாமீப்ஸிதாநாம்  ||
ப்ரஸமயதி விபாகம் பாதகாநாம் குரூணாம் |
ப்ரதயதி ச நிதாநம் பாரமாப்தும் பவாப்தே: || 106

எந்த நற்பிறவி எடுத்தவன் இந்த நூறு ச்லோகங்களையும் தினந்தோறும் படிக்கிறானோ அவனுக்கு, இது விருப்பமான ஸம்பத்துகளுக்குக் காரணமாகிறது. பெரிய பாபங்களுடைய பரிபாக தசையைத் தணிக்கிறது. ஸம்ஸார ஸாகரத்தின் கரையைக் கடக்க முக்ய காரணமாகத் திகழ்கிறது.

इति श्री सौम्यजामातृयोगीन्द्रचरणाम्बुजषट्पदैरष्टदिग्गजान्तर्भूतिश्र्चरमपर्वनिष्ठाग्रेसरैः
श्रीदेवराजाचार्यगुरुवर्यैः प्रसादितं श्रीवरवरमुनिशतकं समाप्तम् ||

ஸ்ரீ வரவர முநி சதகம் ஸமாப்தம் |
வரவர முனி சதகம்: தாமல் ஸ்வாமியின் எளிய பொழிப்புரை முற்றியது|
எறும்பியப்பா திருவடிகளே சரணம் | ஸ்ரீ தேவராஜ குரவே நம: |
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் |

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment