Monthly Archives: December 2015

ப்ரமேய ஸாரம் – 1 – அவ்வானவர்க்கு

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<< நூன் முகவுரை

முதற் பாட்டு

acharya-sishya-instruction

முகவுரை

திருமந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது. அதற்குப் பிரணவம் என்று பெயர். அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது.

அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம்
உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு
கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா
நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்

பதவுரை:

அவ்வானவர்க்கு     : “அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு

மவ்வானவரெல்லாம்  : ‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்

அடிமை                     : அடிமைப் பட்டவர் என்று

உவ்வானவர்           :ஆசார்யர்கள்

உரைத்தர்                    : கூறினார்கள்

இவ்வாறு                   : அவர்கள் கூறிய இம்முறைகளை

கேட்டு                       : தெரிந்து கொண்டு

இருப்பார்க்கு          : தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு

ஆள் என்று                 : அடிமை என்று

கண்டிருப்பர்           : தங்களை அறிந்துகொண்டவர்

மீட்சியில்லா           : மீண்டும் பிறவாத

நாடு                           : திருநாட்டில் போய்

இருப்பார் என்று      : நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று

நான்                           : எம்பெருமானாருடய அடியனான நான்

இருப்பன்                    : நம்பி இருப்பவன்

விளக்கவுரை

அவ்வானவர்க்கு :- ”அ’ காரம் என்ற சொல்லுக்குப் பொருளாய் விளங்குபவன் இறைவன் .அவனுக்கு வேதத்தில் ‘அ’என்று பெர்யர் சொல்லியிருக்கிறது. இங்கு ‘அ’ என்னும் எழுத்தையே கடவுளாகப் பேசியிருப்பது சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான இணைப்பு பற்றி சொல்லும் பொருளும் பிரித்து நில்லாது இயைந்தே இருப்பதால் அவ்வாறு கூறப்பட்டது. மகாகவி காளிதாசன் இறைவனும் இறைவியும் இணைந்திருக்கும் நிலையைச் “சொல்லும் பொருளும் போல” என்று ரகுவம்ச காவியக் கடவுள் வாழ்த்தில் கூறினான்.உப்பு’ என்னும் குணத்தை வைத்து உப்பு என்னும் பொருளைச் சொல்வது போன்றது இது. ஆகவே எழுத்துக்களுல் நான் ‘அ’ கரமாயிருககிறேன் என்று பகவான் கண்ணன் கீதையில் கூறினான். இது பற்றியே திருவள்ளுவரும் ‘அகர முத்த எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார்.

இறைவன் இயங்குதினைக் கண்ணும், நிலத்தினைக் கண்ணும், பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தார்போல் அகரமும், உயிர்க்கன்னும் தனி மெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்றால் அகரமாகிய எச்ஹுத்தைக் காரணமாக உடைய மற்றைய எழுத்துக்கள் எல்லாம் என்று பொருள். அதுபோல இறைவனாகிய காரணத்தை உடைய உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், எழுத்துக்களில் நான் ‘அ’ கரமகின்றேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க. இதனால் உண்மைத் தன்மையுஞ் சிறிது கூரினாராயிற்று. என்று தொல்காப்பிய வ்ழுத்ததிகார ‘மெய்யின்இயக்கம்’ என்ற சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறியவாற்றால் அகரத்தைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம். ‘பூ மகள் பொருளும்’ எனக் கம்பர் பால காண்டக் கடிமணப் படலத்துள் கூறினான். தனால் ஒன்றர்கொன்று இயைந்த பொருள்களில் ஒன்றைச் சொன்னால் அதனோடு இயைந்த மற்றொன்று தன்னடையே கூறினதாக ஆகும். இதனால் அ என்ற எழுத்தைச் சொன்னபோதே அதன் பொருளான கடவுள் சொல்லாமலேயே உணரப்படும். ஆக அவ்வானவர்க்கு என்றால் இறைவனுக்கு என்று பொருள்.

மவ்வானவரெல்லாம்:- மவ்வானவர் என்று ‘ம’ காரத்தின் பொருளான உயிர்களைச் சொல்லுகிறது. ‘ம’காரம் உயிரைச் கொள்ளும் சொல்லாகும் என்பது சாஸ்திரம். இது ஒருமையாக இருந்தாலும் ‘இது ஒரு நெல்’ என்பது போல. சாதி ஒருமையாய் உயிர் சமுதாயமான எல்லாவித உயிரையும் குறிக்கும். எல்லாவிதமான உயிர் என்றது மூன்று வகைப்பட்டிருக்கும் உயிர்களை. வினை வயத்தால் மாறி மாறிப் பிறந்து வரும் உயிர்களும் இறைவன் அருளாலேயே தான் செய்யும் தவம் முதலிய முயற்சியாலேயோ,வினையிலிருந்து விடுபட்ட உயிர்களும், என்றைக்கும் வினைவயப்படாமல் இறைவனுக்கு ஒப்பாக இறைவனோடு கூடவே வீட்டுலுகத்தில் உறையும் உயிர்களும் ஆகிய மூவகைப் பட்ட உயிர்களையும் குறிக்கும். இதனை, பக்தர், முக்தர் நித்யர் என்று சாஸ்திரம் கூறும். ஆக இம்மூவகையான ஆன்மாக்களையும் ஒருமைப்படுத்தி ‘மவ்வானவர் எல்லாம்’ என்று கூறப்பட்டது.

உவ்வானவர்:- ‘உ’ காரத்திற்குப் போருலாயிருப்பவர் என்று பெயர். உகாரம் ஆச்சர்யனை உணர்த்தும் சொல்லாகும். எவாறு என்றால் உகாரத்திற்கு நேர் பொருளாக இருப்பவர் பெரிய பிராட்டியாரான லட்சுமி தேவியாவாள். இது சாஸ்திர முடிவு. பிராட்டி இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்கலைஇரைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மையுடையவள். அதுபோல ஆசார்யனும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மையுடையவர். லட்சுமி தேவிக்கும் அசார்யனுக்கும் தொழில் ஒப்புமையிருப்பதால் உகாரம் அசார்யனைச் சொல்லுகிறது. மேலும் ஆசார்யன் பிரட்டி திருவடிகளில் பக்தி செய்து அவளது அன்பைப் பெற்று அவ்வன்பு காரணமாகத் தன்னை நாடி வரும் சீடர்களைப் பிராட்டியிடம் ஈடுபடுத்தி அவர்களுக்கு அருள் கிடைக்கச் செய்பவர். இவ்வாறு ஆசார்யனைப் பற்றி வரும் உயிர்களுக்கு இறைவன் கருணை காட்டும்படி சிபாரிசு செய்வதால் இருவருடைய செயல்களும் ஒற்றுமைப்படுகிறது. ஆகையால் இறைவனிடம் சிபாரிசு செய்யும் செயல் ஒற்றுமையாலும் அவளிடம் அன்பு பூண்டொழுகும் உறவினாலும் ஆசார்யனை உகாரத்திற்குப் பொருளாகச் சொல்லுகிறது.

இதைப்பற்றி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு கூறப்படுகிறது. எம்பெருமானார் ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது அருகிலேயே இருக்கும் சீடரான முதளியாண்டானுக்கு உகாரத்தின் பொருளைக் கூறியுள்ளார். அதனை அவருடைய குமாரரான கந்தாடை ஆண்டானுக்கு கூற அவரும் பட்டருக்குச் சொல்லியுள்ளார். அக்கருத்துக்களை எல்லாம் தொகுத்து பிரணவ ஸங்க்ரகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதில், ஆசார்யனை உகாரத்தின் பொருளாகச் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது. அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் எம்பருமானார் (உடையவர்) திருவடிகளில் நீண்ட காலம் சேவை செய்து அவருடைய அருளுக்கு இலக்கானவர் .ஆதலால் இவருக்கும் அப்பொருளை உணர்த்தி இருக்கலாம் அன்றோ!. ஆகவே ஐவரும் எம்பெருமானார் சொல்லக் கேட்டு உகாரத்தின் பொருள் ஆசார்யன் என்று அறிந்து அப்பொருளை இந்நூலில் கூறுவாராயிற்று .அகவே உகாரம் அசார்யனைக் குறிக்கும் என்றவாறு.

அடிமை என்றுரைத்தார்:- உயிர்கள் ஆகாரத்திற்கு அடிமைப் பட்டவை என்று சொன்னார்கள். இறைவனுக்கும் உரிகளுக்கும் உண்டான உறவு முறையைக் காட்டிக் கொடுப்பவ நடுவரான ஆசார்யராவார். இறைவன் உயிர்களுக்குத் தலைவனாகவும் உயிர்கள் இறைவனுக்கு அடிமையாகவும் இருவருக்கும் ஆண்டான் அடிமை என்னும் உறவென்றும் உபதேசத்தாலே சீடனுக்கு ஆசார்யன் உனர்த்தினபோது சீடனுக்கு அவ்வுறவு தெரிவதாகும். ஆகையால் ‘அ’ காரத்தின் பொருளான இறைவனுக்கு ‘ம’ காரத்தின் பொருளான உயிர்கள் அடிமையானவர் என்று உகாரத்தின் பொருளான ஆச்சார்யர்கள் சொல்லி வைத்தார்கள். இக்கருத்து ‘அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார் ‘ என்று கூறப்பட்டது. இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையை உணர்த்துவதற்கு ஒரு சிறு கதை திருவாய்மொழி ஈட்டுரையில் சொல்லப்படுவதுண்டு.

வாணியன் ஒருவன் கடல் தாண்டி வாணிபத்திற்கு செல்லும்பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள். மனைவியிடம் தான் மீண்டு வரும் வரை பிறக்கும் குழந்தையை வாணிபத் துறையிலேயே வளர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான். அவ்வாரே ஆண் குழந்தையும் பிறந்து தக்க பருவத்தை அடைந்து தந்தையைப் போல கடல் தாண்டி வாணிபம் செய்யச் சென்றான். சென்ற இடம் தந்தை சென்ற இடமாகவே இருந்தது. ஒருநாள் சரக்குகள் வைப்பது காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் பெரும் கலாய் (சண்டை) விளைந்தது. கூட்டமும் திரண்டு விட்டது. அக்கூட்டத்திலிருந்த ஒருவர் அவ்விருவரையும் நன்கு அறிந்தவராயிருந்தார்.அவ்விருவரையும் பார்த்து “நீர் தந்தை, இவன் மகன்” தந்தையும் மகனுமான நீங்கள் இப்படி சண்டை செய்து கொள்கிறீர்களே! என்று இருவருக்குமுள்ள உறவு முறையை உணர்த்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார். இவ்வாறு நடுவர் ஒருவரால் ஒன்று சேர்ந்த தகப்பனும் மகனும் பெரு மகிழ்ச்சி எய்தினர்.புதல்வனை அடைந்ததால் தந்தைக்கு மகிழ்வும், தந்தையை அடைந்ததால் மகனுக்கு மகிழ்வும் சொல்லும் அளவையில்லாமல் அளவு கடந்ததாயிற்று.

இவ்வாறே   நடுவர் நிலையில் நின்று ஆசார்யன் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உரிய ஆண்டான் அடிமை என்னும் உறவை உணர்த்துகிறான். தாயாய்த், தந்தையாய், மக்களாய், மற்றுமாய் எல்லா உறவாயும் இருப்பவன் என்பதையும் உணர்த்தி, அதே சமயம் இறைவனிடம் இறைவனிடம் ‘உன்னை விட்டுப் பிரிக்க முடியாத உறவாய் இருக்கும் இவ்வுயிர்களை, குற்றங்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இறைவனுக்கும் உணர்த்தி இறைவனுடைய அருள் உயிர்களுக்குக் கிடைக்கச் செய்தும் உயிர்களை அவிரையருளால் உயாவும் செய்கிறான். இது ஆசார்யனது செயல் என்று இங்கு சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

ஆள் என்று கண்டிருப்பார்:- மேற்கூறியவாறு குரு உபதேசத்தால் இறைவனுக்கு அடியார்களாகி அச்சீரியஒழுக்கத்தில் நிலை நிற்பவருக்குச் சிலர் அடியார்களாகி அடியார்க்கு அடியாராகும் தன்மையைப் பெறுகிறார்கள். இறைவனுக்கு அடிமையாயிருப்பது முதல் நிலை என்றும், அவ்வடியார்க்கு அடியராயிருக்கும் தன்மை கடைசி நிலை என்றும் சொல்லப்படுவதால் ‘கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் ‘ என்று அடியார்க்கு அடியாராம் தன்மை இங்குச் சொல்லப்பட்டது.

திருமந்திரத்தில் உயிரக்ளுக்குரிய மூன்று இலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை, ‘இவ்வுயிர்கள் இறைவனைத் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை. உயிர்களுக்கு இறைவனைத் தவிர வேறு வழியில்லை. உயிர்களுக்கு இறைவனைத் தவிர இன்பமில்லை’ என்பன. இம்மூன்றையும்   அடியார் வரையிலும் பெருக்கிப் பார்க்கையில் அடியார் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை’என்றும், அடியார் தவிர வேறு வழி இல்லை என்றும், அடியார் தவிர வேறு இன்பம் இல்லையென்றும் என்றும் பெருக்கிக் கொண்டு அடியார்கள் வரை பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அம்மூன்றை இங்குக் கூறிக் கொள்ளவேணும். இதனால் இறைவனுக்கு அடியராய் இருப்பார்க்கு அடியராய் இருக்கும் எல்லை நிலை கூறப்பட்டது. ஆக, இங்கு கூறியவற்றால் ‘தங்களை அடியார்க்கு அடியராய் அறிந்து அந்நிலையில் இருப்பவர்கள் ‘ என்று பொருள்.

மீட்சியில்லா நாட்டிருபார் என்று இருப்பன் நான்:- மேற் கூறிய ‘அடியார்க்கு அடியராய்’ இருப்பார் மீண்டு பிறப்பில்லாத திருநாட்டிலே போய் அங்கு நித்ய முக்தர்களான அடியார் குழாங்களுடன் கூடி இருப்பார்கள். என்று நம்பி இருப்பவன் நான் என்பதாம். ‘நான்’ என்று கூறுவதால் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்த்துகிறார் ஆசிரியர்.

மேலும் எம்பெருமானார் திருவடிகளிலே பணிந்து அனைத்துசாஸ்திரங்களின் உட்பொருட்களைஎல்லாம் தெரிந்து கொண்டு அதனால் மதிப்பு மிக்கவராய் மிக்க நம்பிக்கை உடையவராயிருப்பவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார். வேத தாத்பர்யங்களில் தம்முடைய முடிவே இறுதி முடிவு என்பதை உலகம் ஏற்கும்படியான மதிப்பு மிக்கவராதலால் அன்றோ’ என்றிருப்பவன் நான் என்று துணிந்து கூறுவாராயிற்று.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம் – நூன் முகவுரை

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

தனியன்

Ramanuja_Sriperumbudurஎம்பெருமானார்

arulalaperumalemperumanar-thirupadagamஅருளாளப் பெருமாள் எம்பெருமானார்

நூல் தோற்றுவாய்

அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய் மெய்ப்பொருள் பற்றியும் மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும் அடைய வேண்டிய பயன் பற்றியும் உண்மையை உள்ளது உள்ளபடி அரிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் , பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடுபேறு அடையவேணும் என்னும் அவாவுடையராயிருப்பவரும் தம்மை ஆதியில் சீடராய் ஏற்றுக்கொண்ட எம்பெருமானார் திருவடிகளிலேயே நீண்ட நாள் (சுமார் 80 ஆண்டுகள்) பணிவிடை செய்து (தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் ) மெய்ப்பொருள், நெறி,பயன் இவற்றின் சிறப்புக்களை எல்லாம் அவர் அருளிச் செய்யக் கேட்டு அறின்து அவ்வொழுக்கத்தின் எல்லை நிலத்தில் நிலை நிற்பவரும் , அதாவது தத்துவம்-இறைநிலை,ஹிதம்-இறைவனை அடைவற்கான தக்க வழி , புருஷார்த்தம்- வாழ்வு இவற்றின் உண்மை . இதனைத் “தலஸ்பர்ஸ ஞானம்” என்பர். தலம் என்றால் பூமி. ஸ்பர்ஸம் என்றால் தொடுதல். நீர் நிலைகளில் இறங்குபவன் அதன் அடித்தலத்தில் சென்று மண்ணை எடுத்து வருவான். அதுபோல் அறிவுக்கடலில் முழுகித் திலைக்கும் இவர் அறிவின் எல்லையைக் கண்டவரென்று இவருடைய அறிவின் கூர்மை சொல்லப்படுகிறது. இறைவனைப் பற்றி அறிவது அதனுடைய முதல் நிலை.அடியார்களைப் பற்றி அறிவது அதனுடைய எல்லை நிலை. அடியார்கள் வரையிலும் அடியவராய் இருத்தல் என்பது கருத்து. வாழ்வாங்கு உணர்ந்தவர் என்பதாம். இவாறு அறிய வேடியவற்றை முழுமையாக அறிந்தவருமான அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தம்முடைய மிக்க கருணையாலே பிறவிப் பெருங்கடலில் உழலுல் உயிர்கள் வீடு பேறு அடைவதற்காக வேதம் முதலிய அனைத்து நூல்களில் இருந்தும் ஓரோர் இடத்திலுள்ள கருத்துக்களை அதாவது எல்லோருக்கும் அறிவதற்கு முடியாதபடி இருக்கிற அவ்வரும் பொருள்களைச் சுருக்கி “ஞான சாரம்” என்கிற நூல் மூலமாக இயற்றி முடித்த பிறகு “பிரமேய சாரம்” என்னும் இந்நூலை இயற்றுகிறார்.

வேதம் என்பது “எழுதாமறை” என்று கூறப்படும். மிகப் பழமையான சாஸ்திரம். இறைவனைப் போல அதுவும் அநாதியாக வந்து கொண்டிருப்பது. அதற்குப் பிரமாணம் என்று பெயர். அதனுடைய அனைத்துக் கருதுக்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது “திருமந்திரம்” அதாவது எட்டெழுத்து மந்திரம். (ஓம் நமோ நாராயணாய) என்பது. அதில் சொல்லப்படும் கருத்துக்களின் திரண்ட பொருளைச் சுருக்கி இந்நூலில் கூறப்படுகிறது.ஆகையினால் இந்நூலுக்கு பிரமேயசாரம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம் – தனியன்

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

arulalaperumalemperumanar-svptrஅருளாளப் பெருமாள் எம்பெருமானார்ஸ்ரீவில்லிபுத்தூர்

mamunigal-vanamamalai-closeupமணவாள மாமுனிகள்வானமாமலை

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச்செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாளமாமுனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய  ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக்கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

விளக்கம்

நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக. “என்றும்” என்ற சொல்லை “நீங்காமல்” என்றும் “நினைத்து” என்றும் இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. அதாவது “என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக. பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப் பிரமேயம் என்று பெயர். அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம்           – அளக்கும் கருவி
பிரமேயம்            – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம்                 – சுருக்கம்
மானம், மேயம்    – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.  அதனுடைய பொருள் பிரமேயம். அப்பொருளின் சுருக்கம் பிரமேயசாரம் என்பதாம். நல்லமறை என்பது போல நல்ல பிரமேயசாரம் அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக: கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள். ஆகவே இந்நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. அதனால் இதற்கு பிரமேயசாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்: அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும் ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம் நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால் அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும், அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.ஆதலால் “மாமுனி” என்றும் அம்முனிவருக்குரிய உயரிய பண்பு. யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது. அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.வணங்கும்பொழுது அத்திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக. அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர். (அம்பதம்) என்ற இடத்தில் இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது. ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு. பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது. “ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும். மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம். இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப்புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்:  வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள். புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட செழிப்பான இடம் என்றவாறு.இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்ககூறியவரும் பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும் அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்குமில்லாதவருமான அருளாளப்பெருமாள் எம்பெருமானார் திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

upadhEsa raththina mAlai – 6

Published by:

srI:
srImathE satakOpAya nama:
srImathE rAmAnujAya nama:
srImath varavaramunayE nama:

Full Series

<< Previous (anthamizhAl naRkalaigaL)

pAsuram 6

aippasiyil ONam avittam sathayam ivai
oppilavA nALgaL ulagaththIr – eppuviyum
pEsu pugazhp poigaiyAr bhUthaththAr pEyAzhvAr
thEsudanE thOnRu siRappAl          6

Listen


Word by word meaning0

ulagaththIr – Oh those of this world!
pugazh – having the greatness
eppuviyum – of people of all the worlds
pEsu – talking/praising about
poigaiyAr – poigai AzhvAr,
bhUthaththAr – bhUthathAzhvAr, and
pEyAzhvAr – peyAzhvAr
thOnRu – coming to this world
thEsudanE – with thEjas (brightness/majesty)
(si)piRappAl – by incarnation,
aippasiyil – in the month of aippasi, (and in the star days of)
Onam – thiruvONam, and
avittam –avittam, and
sathayam –sathayam
ivai – these,
oppilavAm – are unparalleled
nALgaL – star days.

vyAkyAnam

As per the vow in the previous pAsuram, he wishes to start in orderly manner, and he first divines the ways of incarnations of mudhal AzhvArs (first three AzhvArs), by starting with ‘aippasiyil Onam’.

That is, in the month of aippasi, the star day of vishNu which is thiruvONam, and then avittam, and sathayam, these three are unparalleled.

Oh you who do not know the propriety of conduct based on vEdhas, and have set your eyes on the life in this material world! Please celebrate the unparalleled days and reach the correct goal.

To talk about why those days are unparalleled,

eppuviyum, etc – All those in all the worlds were saying ‘that! that!’ about the greatness in the three AzhvArs being born in flowers, and due to their brightness of knowledge they have the greatness of seeing emperumAn in their mind, having the greatness of ‘nAttArOdu iyalvu ozhindhu [thiruvAimozhi 10.6.2]’ (~ not following the material ways of the people) they were moving to different places and were staying in a village in the night {thirukkOvalUr}, moreover, as said in ‘thUvadivil pUmagaL pAr mangaiyOdu [periya thirumozhi 2.10.9]’ and so on, the husband of srIdhEvi that is sarvEsvaran wanted to join the AzhvArs physically and so as said in ‘pulavar nerukka ugandha perumAL’ (perumAn who was happy when pushed by poets), having the greatness of being able to make emperumAn happy by their closeness/pushing of emperumAn, and so these are being praised by the world.

thirukovalur-perumalthirukkOvalUr idai kazhi Ayan – srI dhEhaLeesa perumAL

When asked who they are,

poigaiyAr bhUthaththAr pEyAr they are poigai AzhvAr, bhUthaththAzhvAr, and pEyAzhvAr.

thEsudanE thOnRu – (thEjas /brightness) they incarnated with the brightness which is their natural subservience to emperumAn.

Since the wealth came due to that, those days are unparalleled.

As said in ‘Azhiyankaip pErAyarkkALAm piRappu [periyA thiruvanthAdhi – 36]’, it is the brightness of parama padham (srIvaikuNtam).

As said in ‘karuvarangaththuL kidandhu kai thozhudhEn kaNdEn [mudhal thiruvanthAdhi – 6], and in ‘karukkOttiyuL kidandhu kai thozhudhEn kaNdEn [iraNdAm thiruvanthAdhi – 87], and in ‘karuvirundha nAL mudhalAk kAppu [nAnmugan thiruvanthAdhi – 92], they are having natural subservience. So they are of extreme greatness.

(mAmunigaL) very much loves these star days, and he is loved by these AzhvArs – he is having such greatness. mudhal_azhwars

Moreover, in the month of aippasi, that thiruvONam star day is vishNu‘s star birthday, and also of the one who is the most excellent srIvaishNava who is ‘krishNapAdhasya sUnu [thathva thrayam thaniyan], (the divine son of vadakkuth thiruvIdhip piLLAi), that is – of piLLai lOkAchAryar, so varavaramuni Acharyar jIyar (maNavALa mAmunigaL) with great love, nurtured this day, and set about celebrating regularly with care – this is well known.

These star days also are three (of three AzhvArs) (muppuri Uttiya – where 3 great incidents happen on the same time/day/place)

As said in ‘kriyAdhikArE ashtasAdhyAyE sravaNam cha AchvayangmAsE sarvapApa haramparam |mathsya kUrma varAhANAm AvirbhAva dhinam smrutham [srI pAncharAthram]’ (In the eighteenth chapter, it talks about the star day of thiruvONam in the month of aippasi, the incarnations by mathsya (fish), kUrma (tortoise/turtle), and varAha (boar), which would remove all the sins).

As said in ‘hAritha: – mAsE bhAdhrapadhE chuklE dhvAdhashyAm vishNu dhaivathE | adhithyAmdhayAth vishNurupEndhrO vAmanO vyaya: ’ (in the month of purattasi, Sukla dhvAdhasi, vishNu incarnated like a rising sun like an Indra, as vAmanan).

{So the star days of incarnations of these three AzhvArs are also special, unparalleled, and celebrated by all}

– – – – –

English Translation: raghurAm srInivAsa dhAsan

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

प्रमेय सारं

Published by:

श्रीः
श्रीमते शटकोपाय नमः
श्रीमते रामानुजाय नमः
श्रीमद्वरवरमुनय् नमः

मूल व्याख्यान: श्री वरवरमुनी स्वामीजी, तमिल अनुवाद: श्री . वे. वी. के. श्रीनिवासाचारी स्वामीजी.

e-book: https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygwzixn4PT17uANyK

 arulalaperumalemperumanar-svptrश्री देवराज मुनि स्वामिजिश्रीविल्लिपुत्तूर्

mamunigal-vanamamalai-closeupश्री वरवरमुनि स्वामिजितोताद्रि

यह श्री देवराजमुनी स्वामीजी के ज्ञानसारम्-प्रमेयसारम् पर आधारित श्री वरवरमुनी स्वामीजी के व्याख्यान का हिन्दी भाषांतर है जो तमिल में श्री उभय वेदान्त विद्वान व्ही. के. श्रीनिवासाचारी ने लिखा है जो श्री देवराजमुनी स्वामीजी के वंशज हैं और श्रीविल्लीपुत्तुर में बिराजते हैं।

कीर्ती मूर्ति श्री श्रीनिवासाचारी स्वामीजी ३१ वे पट्टम् श्री उभय वेदान्त विद्वान श्री तिरुमलै विंजीमूर कुप्पन ऐयंगार (श्री कुप्पुस्वामी ताताचार) स्वामीजी के कुमार हैं।

श्री श्रीनिवासाचारी स्वामीजी निर्मित तमिल ग्रंथ २००३ पांगुनी-उत्तीरादी में श्री उ. वे. कुप्पुस्वामी ताताचार स्वामीजी के १०० वे नक्षत्र उत्सव पर प्रकाशित हुआ था।

मूल तमिल ग्रंथ और उसके अङ्ग्रेज़ी तथा इतर भाषाओंके रूपांतरित ग्रंथोंका प्रचार श्री . वे. श्रीनिवासाचारी स्वामीजी के कुमार विद्वान श्री . वे. वेंकटाचारी स्वामीजी (जो ३३ वे पट्टम् को सुशोभित कर रहे हैं) के अनुमति से हो रहा है। श्री . वे. वेंकटाचारी स्वामीजी श्रीविल्लीपुत्तूर मठ में बिराजते हैं और श्री कुप्पन एयङ्गार मंडप श्री विल्लीपुत्तुर में श्री श्रीनिवास सन्निधि तथा श्री देवराजमुनी सन्निधि में नित्य कैंकर्य करते हैं।

हिंदी अनुवाद – केशव रान्दाद रामानुजदास

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

ப்ரமேய ஸாரம்

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

arulalaperumalemperumanar-svptrஅருளாளப் பெருமாள் எம்பெருமானார்ஸ்ரீவில்லிபுத்தூர்

mamunigal-vanamamalai-closeupமணவாள மாமுனிகள்வானமாமலை

புத்தகம் (e-book): http://1drv.ms/208fNcj

வ்யாக்யான மூலம் ஸ்ரீமத் மணவாள மாமுநிகளாலும், தமிழில் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களாலும் எழுதப்பட்டது. இந்த க்ரந்தம் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவம்சத்தில் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமியால் தமிழில் விரிவுரை இயற்றப்பட்டது.

vk-srinivasacharyar

கீர்த்தி மூர்த்தி ஸ்வாமி ஸ்ரீநிவாஸாசாரியார் 31ஆம் பட்டம் ஸ்ரீமத் உபயவேதாந்த வித்வான் திருமலை விஞ்சிமூர் குப்பன் ஐயங்கார் (குப்புஸ்வாமி தாத்தாசார்) ஸ்வாமியின் திருக்குமாரர் ஆவார்.

இந்த தமிழ் வ்யாக்யானம் ஸ்ரீ உ.வே. குப்புஸ்வாமி தாத்தாசாரின் 100ஆவது திருநக்ஷத்திரமான 2003 பங்குனி உத்திரட்டாதி அன்று அச்சிடப்பட்டது.

ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிவாஸாசாரியாரின் திருக்குமாரரும், இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் திருமாளிகையில் 33ஆம் பட்டம் அலங்கரிப்பவரும், ஸ்ரீ குப்பன் அய்யங்கார் மண்டபம் என்று ப்ரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் சன்னதியில் தொடர்ந்து பல கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருப்பவருமான, வித்வான் ஸ்ரீ உ.வே. V.S. வேங்கடாசாரியார் ஸ்வாமி அவர்களின் மங்களாசாசனத்துடன் இத்தை தமிழிலும் மற்ற மொழிகளிலும் வெளியிடுகின்றோம்.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

pramEya sAram

Published by:

SrI:
SrImathE SatakOpAya nama:
SrImathE rAmAnujAya nama:
SrImath varavaramunayE nama:

 arulalaperumalemperumanar-svptraruLALa perumAL emperumAnArsrIvillipuththUr

mamunigal-vanamamalai-closeupmaNavALa mAmunigaLvAnamAmalai

e-book: http://1drv.ms/1NPj5Kg

This is an English translation of the thamizh prose given for “srI aruLALamAmunigAL’s gyAna sAram – pramEya sAram based on srI maNavALA mAmunigaL’s vyAkyAnam’, as written due to his nirhEthuka krupai by srI U.Ve. Vidwan V.K. Srinivasachariar swamy of sri aruLALaperumAL emperumAnAr thiruvamsam at srIvilliputhUr.

vk-srinivasacharyar

kIrthi mUrthy Swami Srinivasachariar is a kumArar (son) of 31st pattam srImadh ubhayavEdhAntha vidwan thirumalai vinjimUr kuppan iyengAr (kuppuswAmy thAthAchAr) swamy.

The thamizh prose by vidhwAn V.K. Srinivasachariar was published in 2003 panguni-uthrattAdhi, as part of 100th year celebration of Sri U.Ve.kuppuswAmy thAthAchAr.

Text from the original thamizh book, and this translation in English and other languages, are being propagated with permission and blessings of the srI U.Ve. V.K. Srinivasachariar’s kumArar, vidhwAn srI U.Ve. V.S. Venkatachariar swamy who is decorating 33rd pattam residing at srIvilliputhur thirumALigai, and doing continuous kainkaryams at srinivAsar sannidhi and aruLaLa perumAL EmperumAnAr (aruLALA mAmunigaL) sannidhi that are at srI kuppan iyengAr maNdapam in srIvillipuththur.

English translation – santhAnam rAjagOpAlan rAmAnuja dhAsan.

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/prameya-saram-tamil/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

SrI dhEvarAja ashtakam – thaniyans

Published by:

srI:
srImathE satakOpAya nama:
srImathE rAmAnujAya nama:
srImath varavaramunayE nama:

Full Series

thyaga-mandapam

SrImath kAnchI munim vandhE kamalApathi nanadhanam |
varadhAngri sadhA sanga rasAyana parAyaNam||

Listen

I prostrate unto  SrI thirukkachchi nambi, son of SrI kamalApathi, who is reliant on the chemistry of incessant devotion to SrI varadharAja.

 

dhEvarAja dhAyA pAthram SrI kAnchI pUrNam uththamam |
rAmAnuja munEr mAnyam vandhEham sajjanASrayam ||

Listen

I prostrate unto SrI thirukkachchi nambi who is the recipient of SrI dhEvarAja‘s grace, respect of SrI rAmAnuja and the refuge of good people.

adiyEn satakOpa rAmAnuja dhAsan

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/sri-dhevaraja-ashtakam-tamil-thaniyans/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://guruparamparai.wordpress.com
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் – தனியன்கள்

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்

thyaga-mandapam

ஸ்ரீமத் காஞ்சீ முனிம் வந்தே கமலாபதி நந்தனம் |
வரதாங்க்ரி ஸதா ஸங்க ரஸாயன பராயணம் ||

கேட்க

கமலாபதி என்பவரின் புதல்வரும் பேரருளாளன் திருவடிகளில் இடைவிடாத பற்று என்னும் ரசாயநத்தையே கதியாகக் கொண்டவருமான ஸ்ரீமத் திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

 

தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

கேட்க

தேவப் பெருமாள் க்ருபைக்குப் பாத்ரமானவரும் ராமாநுஜ முநி என்னும் எம்பெருமானாருடைய மதிப்பைப் பெற்றவருமான நல்லவர்கள் ஆச்ரயிக்கத் தகுந்த திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

ஆதாரம்: http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/sri-dhevaraja-ashtakam/

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

SrI dhEvarAja ashtakam – Audio

Published by:

srI:
srImathE satakOpAya nama:
srImathE rAmAnujAya nama:
srImath varavaramunayE nama:

dhevaperumal-nachiyars-perundhevi-thayarperundhEvith thAyAr, varadharAja perumAL with ubhaya nAchchiyArs – kAnchIpuram

thirukkachi-nambi-kanchithirukkachchi nambi – kAnchIpuram

Meanings

Full rendering

thaniyan 1

thaniyan 2

SlOkam 1

SlOkam 2

SlOkam 3

SlOkam 4

SlOkam 5

SlOkam 6

SlOkam 7

SlOkam 8

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://guruparamparai.wordpress.com
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org