யதிராஜ விம்சதி – ச்லோகம் – 7

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்  6                                                                                                                         ச்லோகம் 8

ச்லோகம்  7

व्रुत्या पशुर्नरवपुस्त्वहमीद्रुशोSपि श्रुत्यादिसिद्धनिखिलात्मगुणाश्रयोSयम् ।
इत्यादरेण क्रुतिनोSपि मिथः प्रवक्तुम् अध्यापि वन्चनपरोSत्र यतीन्द्र! वर्ते ॥ (7)

வ்ருத்த்யா பஷுர் நரவபுஸ்த்வஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோSத்ர யதீந்த்ர! வர்த்தே || (7)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, வஞ்சநபர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான, அஹம் – அடியேன், நரவபு: – மனிதவுடல் கொண்ட, பஷு:து – விலங்காகவே (விலங்கென்றே) வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே, (ஜ்ஞாயே – அறியப்படுகிறேன்.) (உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக்கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.) ஈத்ருஸ: அபி – இப்படிப்பட்டவனாக இருந்த போதிலும், ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்மகுண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்மகுணங்களுக்கும் இருப்பிடமானவன், அயம் – இந்த மணவாளமாமுனிவன்’ இதி – என்றிவ்வாறாக, க்ருதிந: அபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட, ஆதரேண – மனமார்ந்த அன்போடு, மித: – தங்களில் ஒருவர்க்கொருவர், ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்லவேண்டிய நல்வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்கபடியாக, அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும், அத்ய – இப்போது, வர்த்தே – இருக்கிறேன். தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அஹிம்ஸை மெய்பேசுதல் கொடுமையில்லாமை தூய்மை பொறியடக்கம் கொடைத்தன்மை மனவடக்கம் பொறுமை அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும். ‘இவன் ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால் மற்றும் சிலரும் ஆத்மகுணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத்தோன்றக் கூடுமென்று நினைத்து அப்படிச்சொல்லாமல், ‘ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால், ‘அத்தகையவன் இம்மணவாளமாமுனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப்பற்றி மகிழ்ந்து பேசுமளவிற்குத் தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க. அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத நாதயாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின மிகப்புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே, இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

0 thoughts on “யதிராஜ விம்சதி – ச்லோகம் – 7”

  1. மிகவும் ஆற்புதமாகவும் பயன் உள்ளதாகவும் இருக்கிறது. தொடர்ந்து படித்து வருகிறேன்.

    Reply
  2. அற்புதம். உபயோகமாக இருக்கிறது தொடர்ந்து படித்துவர்கிறேன்.
    தாஸன்
    திருமலை ராமானுஜ தாஸன்.
    நவி மும்பை.

    Reply

Leave a Comment