Monthly Archives: October 2015

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 20

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 19

ச்லோகம்  20

विज्न्यपनं यदिदमद्द्य तु मामकीनम् अङ्गिकुरुष्व यतिराज! दयाम्बुराशे! ।
अग्न्योSयमात्मगुणलेशविवर्जितश्च तमादन्नयशरणो भवतीति मत्वा ॥ (20)

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம் அங்கீகுருஷ்வ யதிராஜ! தயாம்புராஸே |
அஜ்ஞோSயமாத்மகுணலேஸவிவர்ஜிதஸ்ச தஸ்மாதநந்ய ஸரணோ பவதீதி மத்வா || (20)

பதவுரை:- தயா அம்புராஸே – பிறர்துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல்போன்ற, யதிராஜ – யதிராஜரே, அத்ய – இப்போது, மாமகீநம் – அடியேனுடையதான, யத் விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ, இதம் – இந்த விண்ணப்பத்தை, அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன், ஆத்மகுணலேஸ விவர்ஜிதஸ் – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன், தஸ்மாத் – ஆகையால், அநந்ய ஸரண: பவதி – நம்மைத்தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான், இதி மத்வா – என்று நினைத்தருளி, அங்கீகுருஷ்வ – ஏற்றுக்கொண்டருளவேணும்.

இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தையேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார். இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது. ‘தயைகஸிந்தோ’ (6), ‘ராமாநுஜார்ய கருணைவ து’ (14), ‘யதீந்த்ர கருணைவ து’ (15), ‘பவத்தயயா’ (16), ‘கருணாபரிணாம’ (19), ‘தயாம்புராஸே’ (20) என்று தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால், ராமாநுஜர் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.

இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள ‘ஸ்ரீமாதவாங்க்ரிஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸபாதபக்தம்’ என்பதனால், இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள ‘பூமன்னுமாதுபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னுமாறனடிபணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற பகுதி நினைவு படுத்தப் பெற்றதும், இங்கு இக்கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள ‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜமுனிவரே! தேவரீர் திருவடித்தாமரைகளில் அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருளவேணும்) என்பதனால், இராமாநுசநூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள ‘இராமாநுச! உன்தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்து’ என்ற பகுதி நினைவுபடுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது. ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப்போலே இந்த யதிராஜவிம்ஸதியையும் நாம் சொல்லக்கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 19

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 18                                                                                                                         ச்லோகம் 20

ச்லோகம் 19

श्रीमन्यतीन्द्र! तव दिव्यपदाब्जसेवां श्रीशैलनाथकरुणापरिणामदत्ताम् ।
तामन्वहं मम विवर्धय नाथ! तस्याः कामं विरुद्धमखिलञ्च निवर्तय त्वम् ॥ (19)

ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (19)

பதவுரை:- ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே, த்வம் – தேவரீர், மே – அடியேனுக்கு, ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட, தாம் – மிகச்சிறந்த, தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை, அந்வஹம் – நாடோறும், விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும், (அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி) நாத – ஸ்வாமியான யதிராஜரே, தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு, விருத்தம் – தடையாகிய, அகிலம் – எல்லாவற்றையும், காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும், ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய – முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்துமுடிக்கிறார். ‘ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் , ‘விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி. இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும், அக்கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று. திருவாய்மொழிப்பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமேயாகும். யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹலோக பரலோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும், யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத்கைங்கர்யமும் முதலியனவாகும்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 18

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 17                                                                                                                        ச்லோகம் 19

ச்லோகம் 18

कालत्रयेSपि करणत्रयनिर्मितातिपापक्र्यस्य शरणं भगवत्क्षमैव ।
सा च त्वयैव कमलारमणेSर्थिता यत् क्षेमस्स एव हि यतीन्द्र! भवच्छ्रितानाम् ॥ (18)

காலத்ரயேSபி கரணத்ரயநிர்மிதாதிபாப்க்ரியஸ்ய ஸரணம் பகவத்க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேSர்த்திதாயத் க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் || (18)

பதவுரை:- யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, காலத்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும், கரணத்ரயநிர்மித – மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட, அதிபாபக்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு) மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு, ஸரணம் – பாவங்களைப்போக்கும் உபாயமானது, பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும். அந்தப் பொறுமையோ எனில், த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே, கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில் அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ, ஏவ – அந்த ப்ரார்த்தனையே, பவச்ச்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு, க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?

கருத்துரை:- கீழ்ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார். இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்கவேண்டாம். முன்பே கத்யம் விண்ணப்பிக்கும்போது ‘மநோவாக்காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே, ‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’ (முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று. அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய்விட்டதே. அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.

(முன்பு எடுத்த கத்யவாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும், ‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும், உண்மையில் – பிறர்துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும் அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள் நடக்கவைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரமஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல் தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும் யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’ (தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல்தகும். இக்கத்யவாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும் பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 17

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 16                                                                                                                        ச்லோகம் 18

ச்லோகம் 17

श्रुत्यग्रवेध्यनिजदिव्यगुणस्वरूपः प्रतयक्षतामुपगतस्त्विह रङ्गराजः ।
वश्यस्सदा भवति ते यतिराज तस्माच्छक्तः स्वकीयजनपापविमोचने त्वम् ॥ (17)

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (17)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்த: பவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்திநாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.

 

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 16

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 15                                                                                                                      ச்லோகம் 17

ச்லோகம் 16

शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्द्यया यतीन्द्र ! ।
त्वद्दासदासगणनाचरमावधौ यः तद्दासतैकरसताSविरता ममास्तु ॥ (16)

ஸப்தாதி போகவிஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! |
த்வத்தாஸதாஸகணநாசரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே, அஸ்மதீயா – அடியேனுடையதான, ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய ருசி: – ஆசையானது, பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால், நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக, (மேலும்) : – எந்த பாக்யஸாலியானவன், த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய, தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது, சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில், பவதி – இருக்கிறானோ, தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில், ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது, அவிரதா – நித்யமாக , பவத்தயயா – தேவரீருடைய தயையினால், மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.

கருத்துரை:- இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது. இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருளவேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால். இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும், யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ அவருக்குத் தொண்டு செய்யவேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய இவ்விரண்டு பலன்களையும் முறையே இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக்கொண்டாராயிற்று. எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால் அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது. எம்பெருமானாருடைய க்ருபையோவெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரையேற்றும். அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும். எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர்நம்பிகள் தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது. இவ்விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத்தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது. பகவானுடைய தயை அடியேனிடம் வேலைசெய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 15

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 14                                                                                                                       ச்லோகம் 16

ச்லோகம் 15

शुद्धात्मयामुनगुरूत्तमकूरनाथ भट्टाख्यदेशिकवरोक्तसमस्तनैच्यम् ।
अध्यास्त्यसन्ङुचितमेव मयीह लोके तस्माध्यतीन्द्र! करुणैव तु मद्गतिस्ते ॥ (15)

சுத்தாத்மயாமுநகுரூத்தமகூரநாத பட்டாக்யதேசிகவரோக்தஸமஸ்தநைச்யம் |
அத்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில், அத்ய – கலிபுருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில், ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான ஆத்மஸ்வரூபத்தையுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன, ஆத்மகுணங்கள் நிறைந்தவர்களில் மிகமிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன, பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸரபட்டரென்ன இவர்களால், உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லாவகையான நீசதர்மங்களும் (குற்றங்களும்), மயி ஏவ – அடியேனிடத்திலேயே, அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன) தஸ்மாத் – ஆகையால், தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்திபெற்ற தேவரீரது கருணையானது, மத் கதி: ஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.(மிகப்பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப்பெருத்த பாபம் செய்த அடியேனொருவனேயன்றி, குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லையென்றபடி.)

கருத்துரை:- ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸரபட்டர் ஆகிய இம்மூவரும் ஸுத்தாத்மாக்கள். ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக்கொண்ட குற்றங்களில் ஒன்றுகூடத் தம்மிடமில்லாமையே ஆகும். பட்டர் – பராஸரபட்டர், கூரத்தாழ்வானுடைய பெரியதிருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற்பெயர். அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரியபெருமாள் ‘பராஸரபட்டர்’ என்று பலதடவைகள் அருள்பாடிட்டதனால் அவருக்கு பராஸரபட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது. அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணுபுராணத்தில் பராஸரமுனிவர் போல், ‘பரம்பொருள் திருமாலே’ என்று அறுதியிட்டுப் ப்ரசாரம் செய்ததேயாகும்.

‘ஸமஸ்தநைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமேயல்லாமல், ‘ஸமஸ்தநைச்யம் மயி அஸங்குசிதமேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம். எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது. அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே. ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக்கொண்டு ‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம் அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன. ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம். ‘தே கருணா து மத்கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியேயன்றி , ‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல்தகும். ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு அவற்றில் கூறப்பட்ட கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம். நல்லதகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப்பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.

ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன், ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந்நன்றிகொன்றவன், துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம் தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.

கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்கமுடியாத பெரிய அஜ்ஞாநக்கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன். இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை. அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதிவார்த்தையின் பொருளிலும் அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக்கொண்ட குற்றங்களாகும்.

ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட ஜ்ஞானயோக கர்மயோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை. வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன். மூர்க்கத்தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும் ‘யாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 14

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 13                                                                                                                        ச்லோகம் 15

ச்லோகம் 14

वाचामगोचरमहागुणदेशिकाग्रयकूराधिनाथकथिताकिलनैच्यपात्रम् ।
एषोहमेव न् पुनर्जगतीद्रुशस्तद् रामानुजार्य करुणैव तु मद्गतिस्ते ॥ (14)

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே || (14)

பதவுரை:- ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம்  அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும், ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய, தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட, அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன், ஏஷ: அஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன், ஈத்ருஸ: புந: – இத்தகைய மற்றொருவனோவென்னில், ஜகதி – உலகில், (அஸ்தி) – இல்லவேயில்லை. தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய, கருணா ஏவ – கருணையே, மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக, பவதி – ஆகிறது.

கருத்துரை:- இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார். கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க. எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார். தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி. ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது. கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 13

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 12                                                                                                                    ச்லோகம் 14

ச்லோகம் 13 

तापत्रयीजनितदुःखनिपातिनोSपि देहस्थितौ मम् रुचिस्तु न तन्निव्रुत्तौ ।
एतस्य कारणमहो मम पापमेव  नाथ! त्व्मेव हर तध्यतिराज! शीघ्रम् ॥ (13)

தாபத்ரயீஜநிதது:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் || (13)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே, தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூவகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டேயிருந்த போதிலும், மம து – மிக நீசனான அடியேனுக்கோவென்றால் , தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒருபடிப்பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில், ருசி: – ஆசையானது, பவதி – உண்டாகிறது, தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில், ந ருசி: – வெறுப்பு, பவதி – உண்டாகிறது. ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு, காரணம் – காரணமானது, மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும். நாத – ஸ்வாமீ!, த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே, தத் – அப்பாவத்தை, ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே, ஹர – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘ஐயா, நீர் இதுவரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம், நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையேயாகும். அவ்வாசையை அவ்வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை, நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து அவ்வுடலை நீரே விட்டுவிடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார் இதனால். தாபத்ரயீ – மூன்று வகையான துக்ககாரணங்கள், (1) ஆத்யாத்மிகம் – உடலைப்பற்றிவருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன, (2) ஆதிபௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன. (3) ஆதிதைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை முதலியன. இவற்றை வேறுவகையாகவும் கூறுவதுண்டு. உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும் ‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க. ‘தந்நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் ந என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது. ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும் உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை அடுத்த க்ஷணத்திலேயே போக்கியருளவேணும்மென்றார் இதனால். இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம், இவர் இன்னும் சிலநாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 12

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 11                                                                                                                       ச்லோகம் 13

ச்லோகம் 12 

अन्तर्बहिस्सकलवस्तुषु सन्तमीशम् अन्धः पुरस्स्थितमिवाहमवीक्षमाणः ।
कन्दर्पवश्यह्रुदयस्सततं भवामि हन्त त्वदग्रगमनस्य यतीन्द्र नार्हः ॥ (12)

அந்தர்பஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ்ஸ்திதமிவாஹமவீக்ஷமாந: |
கந்தர்பவஷ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர! நார்ஹ: || (12)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும், அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து, ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை, புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை, அந்த: இவ – குருடன் போல், அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு, (அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தையுடையவனாக, ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன். (ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு (அஹம்) ந அர்ஹ: – அடியேன் தகுந்தவனாக இல்லை, ஹந்த – ஐயோ கஷ்டம்.

கருத்துரை:- ‘ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார். ‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய், உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய் தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி. யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும். காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி, அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும் இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால் அப்படிவந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 11

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 10                                                                                                                      ச்லோகம் 12

ச்லோகம் 11

पापे क्रुते यदि भवन्ति भयानुतापलज्जाः पुनः करणमस्य कथं घटेत ।
मोहेन मे न भवतीह भयादिलेशः तस्मात् पुनः पुनरघं यतिराज कुर्वे ॥ (11)

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே , பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப்போது, மம – அடியேனுக்கு, பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும், பவந்தி யதி – உண்டாகுமேயானால், அஸ்ய புந: கரணம் – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது, கதம் கடேத – எப்படிப்பொருந்தும் ? இஹ – இப்பாவம் செய்யும் விஷயத்தில், பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட, மோஹேந – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே, மே – அடியேனுக்கு, ந பவதி – உண்டாகிறதில்லை. தஸ்மாத் – அதனால், அகம் – பாவத்தை, புந: புந: – மறுபடியும் மறுபடியும், குர்வே – செய்துவருகிறேன்.

கருத்துரை:- ஐயா, ஸரணாகதனென்னும் பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்தபிறகு பயமும் வெட்கமும் உண்டானால் பாபத்தை மேலும் செய்யமாட்டீர். பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம் என்று ஊஹித்து அருளிச்செய்கிறார். அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை. அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்யவழியில்லை. அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற மோஹத்தை – ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை நீக்கியருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும். அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கியருளவேணும்) என்பதை இங்கும் வருவித்துக்கொள்ள வேணும்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org